தமிழ்நெறி விளக்கம் 37
 14.1முதுக்குறைந் தனளே முதுகுறைந் தனளே
மலைய னொள்வேற் கண்ணி
முலையும் வாராள் முதுக்குறைந் தனளே”(107)

(தொல். அகத். 3 ந; யா. வி. 32, மேற்.)

என்பது செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்றது.
 15. 2இளைய ளம்ம தானே கிளையும்
வளைபயில் பொருதிரைக் கடல்கண் டனைத்தே
புள்ளு நாளும் பிறவும்
தெள்ளிதி னுணர்தல் பெரியோர்க்குக் கடனே” (108)
என்பது வரைவு மறுத்தது.
 16.3இளிவரு சிந்தையன் மன்னே நம்வயின்
ஒளிதிகழ் பெருந்தழை யீந்த
அளிதிகழ் நெஞ்சி னருளி னானே” (109)
என்பது வரைவு மறுத்தவழித் தலைமகள் ஆற்றாளாயிற்று.
 17. “வருந்தினை வாழி தோழி நந்தமர்
திருந்திலை நெடுவே லண்ணலை
விரும்பினர் மாதோ வொழிகநின் மெலிவே” (110)
என்பது வரைவுணர்ந்த தோழி தலைமகளை ஆற்றுவித்தது.
 18. “கலந்தாங் கிளமுலைக் கற்புடை மடந்தையைக்
குலஞ்சா லொழுக்க நோக்கி
நலஞ்சா லண்ணற்கு நேர்வது நடையே” (111)

(களவியற். 49, மேற்.)

என்பது நற்றாய் தமர்க்கு அறத்தொடு நின்றது.
 19. 4வான்றோய் தொல்குடி மரபு மவ்வழிச்
சான்றீ ருமது வரவு நோக்கி
 

     1.“திருந்தா   மொழியுந்   திரளா   முலையுந்   தரனமென்னும்
முருந்தாகுமென்னகை மூரலுந் துய்ய முருகவிழ்பூங், கருந்தாழ் குழலுமென்
கைவந்ததில்லை    கனங்குழையாய்’    அருந்தா   வமுதமன்  னாளறி
வானின்னை யன்னளின்றே”
(அம்பிகாபதிகோவை, 359.)

     2.‘பரியஞ் சிறிதென்றானும் இளையளாலோ வென்றானும் நாளும்
புள்ளும்
     திருத்தி     வாரீரோ      வென்றானும்    அங்ஙனம்
மறுத்தாரென்பதனைத் தலைமகள் கேட்ட ஞான்றும் ஆற்றாளாம்’ (இறை.
29, உரை.)

     3.‘எம்பெருமான் ஒருவர்க்கு ஒருகுறை முடிப்பினல்லது ஒருவரை ஒரு குறைவேண்டுந்தன்மையனல்லன்; அல்லாதான் இக்குறைவேண்டியது,
என்கட்கிடந்த   அருளாகாதே? இவற்கு   இவ்விளிவரவு  ஆக்கினேன்
பாவியேனெனவும் ............ தலைமகள் வேறுபடும்’ (இறை. 29, உரை,)

     4.ஒப்பு: “சான்றோர் வருந்திய” (தொல்.களவு. 23, பொருள், 20 ந;    இறை.   28;   களவியற்,   49,  மேற்);   ”சான்றோர்   வரவும்” (பாண்டிக்கோவை)