5 | கதுப்பு நீவிநின் சிறுபுறங் காண்கென முன்செல விடுப்ப நாணிப் பின்பின் தாழ்ந்தன ளொதுங்க யானுந் தாழ்தலின் வைகின மாதோ நெஞ்சே .பைவிரி யல்குலொடு பழுவத் தானே” (116) |
இதுவுமது. |
5. | “வில்லோன் காலன கழலே தொடியோள் மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர் யார்கொ லளியர் தாமே யாரியர் கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி 5.வாகை வெண்ணெற் றொலிக்கும் வேய்பயி லழுவ முன்னி யோரா” (குறுந். 7) |
என்பது சுரத்தெதிர்ப்பட்டார் சொல்லியது. |
6. | “1செங்கதிர்ச் செல்வனு மத்தஞ் சேர்ந்தனன் கொங்கிவர் குழலோ டிவ்வழித் தங்கினை சென்மோ நகைவெய் யோனே” (117) ( களவியற் மேற்.) |
இதுவுமது. |
7. 5. | “2நெடுந்தேர்க் காளையொ டோராங் கேகிக் கடுஞ்சுரந் தீதின் றிறந்தன ளவளெனக் கூறுமி னந்தணிர் தொழுதன னும்மே தேய்வுறு மதியொடு கலங்கும் யாயு மாயமு மிருந்துயர் கெடவே” (118) |
என்பது எதிர்கண்டார்க்குத் தலைமகள் சொல்லியது. |
8. | “வண்டார் கோதை வரிவளைத் தோளியைப் பண்டா டிடங்களுட் காணா தின்னும் நில்லா வுடம்பொடு கெழீஇ நின்றனை கொல்லோ வாழிய நெஞ்சே” (119) |
என்பது தலைமகளைக் காணாது செவிலி இரங்கியது. |
9. | “வலியை மன்ற நீயே பொலிவளை காதற் றோழி கையகன் றொழியவும் பேதுற லிலையா லுயிரொடும் புணர்ந்தே” (120) |
என்பது தோழியை நோக்கிச் செவிலி சொல்லியது. |
1.ஒப்பு. “எம்மூ ரல்லது”, நல்லோண் மெல்லடி” (தொல்.அகத். 40, ந; மேற்; களவியற்.51, மேற்.) 2. ஒப்பு.“சேட்புல முன்னிய”, “கடுங்கட் காளையொடு” (ஐங்குறு.384 - 5.) |