இதுவுமது. |
12. 5. | “நிலந்தொட்டுப் புகாஅர் வான மேறார் இலங்கிரு முந்நீர் காலிற் செல்லார் நாட்டி னாட்டி னூரி னூரிற் குடிமுறை குடிமுறை தேரிற் கெடுநரு முளரோ நங் காத லோரே” (குறுந். 130) |
என்பது நற்றாய்க்குச் சொல்லிச் செவிலி பின் சென்றது. |
13. | “2வெய்யோன் சாபத் தெய்கணை குளிப்ப வீழ்ந்தது மன்றவிக் களிறே தாழ்ந்த இடுமுத் தணிவடஞ் சுடரத் தொடியோ ளொதுங்கிய சூழன்மன் னிதுவே” (122) |
என்பது சுரத்திடைச் சென்ற செவிலி இரங்கியது. |
14. | “காய்ந்திலை மறவை மன்னோ வேந்திழை அழல்கெழு வெஞ்சுரஞ் செலவும் எழில்கெழு பாவை யேந்திய குரவே” (123) |
இதுவுமது. |
15. | “3ஒண்டிற லண்ணலோ டொளியிழை மடந்தையை நுண்புரி மார்பி னந்தணிர் கண்டனிர் பிறவோ கடுஞ்சுரஞ் செலவே” (124) |
என்பது செவிலி இடைச்சுரத்து வருவாரை வினாயிற்று.
1. ஒப்பு.“மள்ளர் கொட்டின்” (ஐங்குறு. :371); “ஞாயிறு காயாது” (குறுந். 387.) 2.“செறிகழல்,” “கொடுவிற்படை” ( இறை. 23. மேற்.) 3. ஐங்குறு. 387 : 1 - 3. |