என்பது செவிலி மனைவயிற் பெயர்ந்தது. |
18. | “நாண்கால் வாங்கிய சிலையர் சீற்றமொ டீங்கிவ டன்னையர் வருகுவர் யாங்கா குவரிவர் வளையுங் காலே” (126) |
என்பது தலைமகள் தமர் பின்செல்லக் கண்டார் சொல்லியது. |
19. | “2அயிலே ரம்பினர் நின்னையர் கயில்வளை பயில்பூஞ் சுனையி னீழல் மயிலேர் சாயன் மறைகுவன் சிறிதே” (127) |
என்பது தலைமகள் தமராதல் அறிந்து தலைமகன் மறைந்தது. |
20. 5. | “வரிசிலை யிடவயி னேந்திக் கணைதெரிந் தெரியுமிழ் கண்ணின ரிவரே ஞாங்கர் ஆயிழை மடந்தை தமரென மறைந்த சேயுயர் செல்வனுஞ் சினவு மாயிடை அறனன் றிதுவென வுரைஇத் திறனறி மாந்தரைத் தெருட்டுது நாமே” (128) |
என்பது இடைச்சுரத்துக் கண்டார் சொல்லியது. |
21. | “இவளே, நலமேம் பட்ட வம்பின ளிவளே குலமேம் பட்ட சான்றோர் மகனே இருவர் தன்மையு நோக்கிப் பருவர லெய்தாது கொடுத்தலோ பண்பே” (129) |
இதுவுமது. |
22. | “பெரும்பட ருழக்குங் கிளைமகிழ் தூங்கத் திருந்தெழி லல்கு லன்பொடு வியன்பெருந் தொல்பதிப் புகுகநாம் விரைந்தே” (130) |
என்பது பெயர்ந்தனர் வருதல்.
1. ஒப்பு. “வெந்நீ ரருஞ்சுரம்”, “நெருங்கடல்” (இறை. 23, மேற்.); கலி, 9: 15 - 7 ; சீவக. 563; பெருங். 1. 47 : 253 - 5. 2. நற்.362 ; ஐங்குறு,312 |