தமிழ்நெறி விளக்கம் 45

உணவு

10.தினையே1தருப்பண முதிரை செந்நெல்
விலைகோ ளினையன மேவிய வுணவே.

     (எ-து.) உணவாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ-ள்.) தினையும்,   தருப்பணமும்,  வரகு  முதலியனவும்,   வயல்
விளையுஞ் செந்நெல்லும், உப்பு விலையும்  உள்ளிட்டனவெல்லாம்  உணவா
மென்றவாறு.

     இனையன  என்றதனால் வெதிர்நெல்லும்,  கிழங்கும்,  2தேனெய்யும்,
அருவி நீரும், சுனை நீரும்;  ஆறலைத்தனவும்,  வறுஞ்சுனை  நீரு. 3உவர்;
நீரும்; கான்யாற்று நீரும்; வெண்ணெல்லும், கிணற்று நீரும், பொய்கை நீரும்;
மணற் கூவல் நீரும் உள்ளிட்டனவெல்லாம் கொள்க.(10)

இசை

11.4முருகியங் குறிஞ்சி துடியே பஞ்சுரம்
பெருகிய வேறங் கோட்பறை தாரம்
பல்லிய மருத 5மழப்பறை செவ்வழி
சொல்லிய பிறவுஞ் சொற்றவற் றிசையே.

     (எ-து.) இசையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ-ள்.)  வெறிப்பறையும். குறிஞ்சிப் பண்ணும்;  துடியும்   பஞ்சுரப்
பண்ணும்; ஏறங்கோட்  பறையும், தாரப் பண்ணும்; நெல்லரி கிணையு முதற்
பல்லியமும், மருதப்  பண்ணும்; நெய்தற்  பறையும்,  செவ்வழிப்  பண்ணும்
உள்ளிட்டன ஐந்திணைக்கும் இசையா மென்றவாறு.

     பிறவுமென்றதனால்     தொண்டகப்   பறையும்,   பூசற்   பறையும்,
வேய்ங்குழலும், யாழும், 6நாவாய்ப் பறையும் உள்ளிட்டனவெல்லாம் கொள்க.
(11)


    1. தருப்பணம் - அவல்; “ஆத்திரைத் தருப்பணம்” (பெருங். 2. 9: 251)
என்பதனால் யாத்திரை செல்வாரை வழிபறித்துப் பெறுவதென்று கொள்க. 

    2. தேனெய் - தேனாகிய நெய்; இரு பெயரொட்டு.

    3. “கல்லறுத் தியற்றிய வல்லுவர்ப் படுவில்” (அகநா 76: 3.)

    4. முருகியம்: “முருகிய நிறுத்து முரணின ருட்க” (முருகு. 243)

    5. அழப் பறை-பிணத்திற்குக் கொட்டும் சாப்பறை; அழன்-பிணம்,

    6. இறை. 1, உரை; நம்பி. 24;சீவக. 501.