.10. | “மீளா வென்றி யிருபெரு வேந்தரை வாளம ரழுவம் பெயர்க்கும் ஆள்வினைக் ககல்வர்க்நம் மன்பி னோரே” (144) |
என்பது பகை = தணிப்பான் பிரிவரென உணர்த்தியது. |
11. | “வெல்பெருந்தானை வேந்தன் பகைமிசைச் செல்குவர் மாதோ காதலர் அல்லியங் கோதை யழுங்கலோ வொழியே” (145) |
என்பது வேந்தற் குற்றுழிப் பிரிவரென வுணர்த்தியது. |
12. | “நாளு நாளு மான்வினை யழுங்க இல்லிருந்து மகிழ்வோர்க்கில்லையார் புகழென ஒண்பொருட் ககல்வர் நங் காதலர் கண்பனி துயரொழி தோழி நீயே”
(சிற்றட்டகம்; நம்பி. 251, மேற்.) |
என்பது பொருள்வயிற் பிரிவரென உணரத்தியது. |
13. | “1சேறல ரென்ப துளதெனி னுரைமதி மாறினர் வல்வர வுரைப்பின் ஊறின் றிவ்வழி வாழ்வோர்க் குரையே” (146) |
என்பது பிரிவரென்பது கேட்ட தலைமகள் ஆற்றாளாய்த் தோழிக்குச் சொல்லியது. 1 |
14. 5. | ‘நீர்வார் கண்ணை நீயிவ ணொழிய யாரே பிரிகிற் பவரே சாரற் சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மரா = அத்து வேனி லஞ்சினை கமழும் தேமூ சொண்ணுத னின்னொடுஞ் செலவே” (குறுந். 22) |
என்பது ஆற்றாளாயதலைமகட்குத் தோழி பிரிவு நயப்பச் சொல்லியது |
15. | “நல்லிசை நிறுத்தல் வேண்டித் துணைபிரிந்து செல்வது காதலர் கடனே சென்றென ஒல்கிய வுள்ளமொடு புலவா தில்லிருந் தாற்றுதல் கற்பின தியல்பே” (147) |
1இதுவுமது. |
16. | “எழுதரு மதியங் கடற்கண் டாஅங் கொழுகுவெள் ளருவி யோங்குமலைநாடன் ஞாயி றனையனென் றோழி நெருஞ்சி யனையவென் பெரும்பணைத் தோளே” (குறுந். 315) |
என்பது தலைமகள் பிரிவுடன்பட்டது. |
17. | “அருஞ்சுரக் கவலையும் பிரிந்தென வரூஉம் பெருதண் வாடையு நினைஇ வருந்துக மெம்மை மறவா தீமே” (148) |
என்பது பிரிவுடன்பட்ட தலைமகள் தலைமகற்குச் சொல்லியது.
1.ஒப்பு ; குறள், 1151, |