தமிழ்நெறி விளக்கம் 47
இதுவுமது.
 18. “காலிய னெடுந்தேர்க் கடும்பரி கடைஇப்
பாலைக் கானம் போகி வினைமுடித்
தின்னே வருக நாமே
பொன்னேர் மேனி புலம்புதவப் பெரிதே” (149)
என்பது பிரிந்து செல்லுந் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
 19.1ஆண்டவ ணொழிந்தன்று மிலையே யீண்டிவண்
எழுவினி வாழியென் னெஞ்சே பணிமொழி
மையே ருண்கண் கலுழச்
செய்வது துணிந்த பொருள்வயி னானே” (150)
என்பது தலைமகன் இடைச்சுரத்துத் தலைமகளை நினைந்த நெஞ்சினைத் தெளித்துச் சென்றது.
20.2செல்லா ரவரென யானிகழ்ந் தனனே
ஒல்லா ளிவளென வொழிந்தனர்
நல்லெழி லுண்க ணலியுமென் னெஞ்சே” (151)
என்பது தலைமகன் அறியாமற் பிரிந்தவிடத்துத் தலைமகள் ஆற்றாது சொல்லியது.
 21.

 

3பிடவுங் கோடலும் விரைஇ மடவ
தாரீன் கொன்றையொடு தோன்றி தோன்றக்
கார்கொண் டன்றே கானம்
நீர்க்கொண் டனவாற் றோழியென் கண்ணே” (152)
என்பது பருவவரவு கண்டு ஆற்றாளாயது.
 22.

 

 5.

“அம்ம வாழி தோழி யவர்போல்
நம்முடை வாழ்க்கை மறந்தன்று கொல்லோ
மனையெறி யுலக்கையிற் றினைக்கிளி கடியும்
கான நாடன் பிரிந்தெனத்
தானும் பிரிந்தன்றென் மாமைக் கவினே” (153)
இதுவுமது.
 23. 

 5.

“சிறுபுன் மாலை சிறுபுன் மாலை
தீப்பனி யன்ன தண்வளி யசைஇச்
செக்கர்க் கொண்ட சிறுபுன் மாலை
வைகலும் வருதியா லெமக்கே
என்றுஞ்செல் லாயவர் குன்றுகெழு நாட்டே” (154)

(தொல். களவு. 21, ந. மேற்.)

    என்பது தலைமகளாற்றாமைக்குத் தோழி ஆற்றாளாயது.

1.ஒப்பு. “அன்றவ ணொழிந்தன்று மிலையே” (அகநா. 19)

2.குறுந்.43. 3. ஐந்.எழு. 15.