தமிழ்நெறி விளக்கம் 48

24.

 

5.

நிரையிர் செல்லு மோவென நேர்ந்து
புலைய னெறிந்த பூசற் றண்ணுமை
1ஏவலிளையர் தாய்வயிறு கரிக்கும்
இன்னா வருஞ்சுர மென்ப
என்னோ தோழியவர் சென்ற வாறே” (155)
என்பது ஆற்றாளாய தோழிக்கு ஆற்றுவலென்பது படச் சொல்லியது.
25.

 

5.

“கவ்வையம் பெரும்பழி தூற்ற நலனழிந்து
பைதலஞ் சிறுநுதல் பசலை பாய
நம்மிதற் படுத்த வவரினு மவர் நாட்டுக்
குன்றங் கொடியகொ றோழி
ஒன்றுந் தோன்றா மழைமறைந் தனவே” (156)

(தொல்.  களவு. 23 ,. மேற்.)

என்பது தோழி ஆற்றுவிப்பான் தலைமகனை இயற்பழித்தது.
26.


 5.

“தொடிநடந் திழியச் சாஅய்த் தோளவர்
கொடுமை கூறின வாயினுங் கொடுமை
நல்வரை நாடர்க்கில்லை தோழியென்
நெஞ்சிற் பிரிந்தது மிலரேதம்
குன்ற நோக்கங் கடிந்தது மிலரே” (157)

(தொல்.  களவு 20, . மெய்ப். 22, பேர்.)

என்பது தலைமகள் அதனுக்கு ஆற்றாளாய் மொழிந்தது.
27.



5.

“நிறைநீர் மாமழை பொறைமெலிந் துகுத்தென
வம்பத் தண்பெய லுணராள் கண்டே
காரென வருந்து மிவளினு மிவள்வாய்த்
திருநகை யெயிற்றி னிணர்முகை யரும்பிய
பெருந்தண் முல்லையு முடையவா னகையே” (158)
என்பது பருவம் அன்றென ஆற்றுவித்தது.
28. “காரே செய்த கானங் கனைபெயற்
கோப மூர்ந்த கொங்குசேர் நெடுநெறி
உள்ளினு முள்ள முவப்பப்
புள்ளெழ வந்தன்று நெடுந்தகை தேரே” (159)
என்பது தேர்வரவு கூறி ஆற்றுவித்தது.
29. “இல்லமொடு மிடைந்த கொல்லை முல்லைப்
பல்லான் கோவலர் பையு ளாம்பல்
மயங்கிருண் மாலை கேட்டொறும்
கலங்குங்கொ லளியணங் காத லோளே” (160)
   என்பது வினைமுடித்து மீள்வான் நெஞ்சிற்குச் சொல்லியது.

     1.இவ்வடி   பலநூலுரைகளில்   ஒருமை--பன்மை மயக்கத்துக்கு
மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது.