என்பது கழற்றெதிர் மறுத்தது. (9)
5. | “புலந்துறை போகிய நெஞ்சுநிறை யழிந்து கலங்குவ தாயின் மாதோ சிலம்பனை யாரோ தெளிக்குநர் பிறரே.” (10) |
என்பது பாங்கன் பிழைத்தனனென்று ஆற்றானாயிற்று.
6. | “வாழ்வதி யாவது கொல்லோ வான்புகழ்ச் சூழ்கழ லண்ண னெஞ்சம் ஆழ்துய ரெய்த வணங்கிய வணங்கே” (11) (களவியற்.. 26, மேற்.) |
என்பது பாங்கன் இடம் வினாயிற்று.
7. | “கண்ணே காவியங் கயமலர் நுதலே தண்ணிள மதியெனத் தகுமே பதியும் பெருமலைச் சாரற் சீறூர் அருநிறை வாங்கிய வாயிழை தனக்கே” (12) |
என்பது தலைமகள் குறியுரைத்தது.
8. | “வேங்கை யொள்வீ காந்தளொடு கமழும் பூந்தண் சாரலு மிதுவே யேந்திலை அயில்வே லண்ணல் கூறிய மயிலேர் சாயல் வண்ணமு மிதுவே”(13) (களவியற்.27, மேற்.) |
என்பது பாங்கன் எதிர்ப்பட்டது.
9. | “நோதக வுடைத்தே நெஞ்ச மதிமிசை மாதர்க் குவளை மலர்மலர்ந் தன்ன கருந்தடங் கண்கண் டாற்றிய பெருந்தகை யண்ணலைக் கழறினன் பெரிதே” (களவியற். 27, மேற்) |
என்பது தலைமகன்ஆற்றல் கூறியது.
1. காணிற் கழறலை கண்டிலை மென்றோட் கரும்பினையே” (திருச்சிற்
23); “அம்மவாழி” (