பிறவு மென்றதனாற் பரத்தையர் கூற்றும் பூப்புணர்த்துதலும் உள்ளிட்டனவெல்லாம் கொள்க |
1. | “புலைமக னாதலிற் பொய்ந்நின் வாய்மொழி நில்லல் பாண செல்லினிப் பரியல் பகலெஞ் சேரிக் காணின் *அகல்வய லூர னாணவும் பெறுமே”(166) ( தொல். கற்பு. 9 ந; நம்பி. 260. மேற்.) |
என்பது பாணனுக்கு வாயில் மறுத்தது. |
2. | “..................................................................... நல மின்னே இசைகுவன் மன்னே யானே அருளுடை மாத ரலையா தீமே” (167) |
என்பது வாயில் மறுக்கப்பட்ட பாணன் கூறியது. |
3. | “..................................................................... திருநுதற் பேதை ஊரன் செய்த துணராள் கேண்மை உள்ளவும் படாஅ ளிவளென எள்ளின ளம்மதன் னீர்மை யானே” (168) |
என்பது விறலி வாயில் மறுத்தது. |
4. | “..................................................................... அங்கட் பொய்கை யூரன் கேண்மை திங்க ளொருநா ளாகுந் தோழி (169)...................................................................................................”
( சிலப். அ: 39, 41, அரும்பத. மேற்.) |
என்பது தோழிக்கு வாயில்மறுத்தது. |