மரம் முதலியன 12. | வேங்கை காந்தள் சீய மயிலே பாங்கர் மராமரஞ் செந்நாய் பருந்தே குருந்தே முல்லை யிரலை புறவே காஞ்சி கழுநீர் மேதி யன்னம் | 5 | கைதை முண்டகங் கராமே கம்புளென் றெய்திய பிறவு மியம்பிய விலங்கே. |
(எ-து.) விலங்காமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வேங்கை மரமும், பூங்குலைக் காந்தளும், சீயமாவும், மயிற்புள்ளும்; ஓமை மரமும், மராம்பூவும், செந்நாய்மாவும், பருந்துப் புள்ளும்; 1குருந்த மரமும், கொடிப்பூ முல்லையும், இரலை மாவும், புறவுப்புள்ளும்; காஞ்சி மரமும், பூங்கழு நீரும், எருமை மாவும், அன்னப் புள்ளும்; தாழை மரமும், பூங்கழி முள்ளியும், 2முதலை மாவும், 3கம்புட் புள்ளும் பிறவும், ஐந்திணைக்குரிய விலங்கா மென்றவாறு. பிறவு மென்றதனால், அகிலும், சந்தனமும், வேங்கைப் பூவும்; சுனைக் குவளைப்பூவும், புலியும், யானையும், கிளியும், வேங்கையும், குராம்பூவும், பாதிரம்பூவும், முருக்கும்; கொன்றையும், தோன்றிப் பூவும், முயலும், கானங் கோழியும்; மருதும், வஞ்சியும், தாமரைப்பூவும், நீர்நாயும், தாராவும்; புன்னையும், ஞாழலும், நெய்தற் பூவும், அன்னமும், 4மகன்றிலும், உள்ளிட்டன வெல்லாம் கொள்க. (12) உரிப்பொருள் 13. | புணர்தலும் பிரிதலு மிருத்தலு மூடலும் மனைவயி னிரங்கலு மவற்றி னிமித்தமும் களவொடு கற்பெனக் கவைநர் கூறிய அளவி லுரிப்பொரு ளாகு மென்மனார். |
1. “பெருந்தண் முல்லைப் பிள்ளை யோடிக், குருந்தந் தழுவுங் கூடலூரே”(‘திவ். பெரியதிரு. 5. 2:7.) 2. ‘மா சுறவும் முதலையும்’ (இறை, சூ. 1, உரை); “கெண்டை யஞ்சினை மேய்ந்து கிளர்ந்துபோய், முண்டகத்துறை சேர்ந்த முதலைமா’ சூளா. நாட்டுச். 22.) 3. கம்புள்-சம்பங்கோழி. 4. “நீருறை மகன்றிற் புணர்ச்சிபோல” (குறுந். 57:2); “அலர்ஞெமன்’ மகன்றில்” (பரி. 8: 44.) |