தமிழ்நெறி விளக்கம் 54

     1ஒப்பாவது மைத்துனக் கோத்திரத்தாற்கு மாற்றாது கொடுப்பது. இது
கற்பின்பாற் படும்,

     2பொருள் கோளாவது ஆனும் ஆனேறும் பொற் கோட்டுப் பொற்குளம்
பினவாகச் செய்து அவற்றோடு  நீரிற்   கொடுப்பது    இவ்வாறு   ஈதற்கண்
ஒத்தபிராய முதலாயினவற்று உளவெனின்  கற்பின்பாற்  படும்;   அன்றெனிற்
பொருந்தாக் காமத்தின்பாற்படும்.

     3தெய்வமாவது வேள்வியாசிரியற்கு வேள்வித்தீ  முன்னர்க்  கொடுப்பது.
இதுவும் பொருள் கோளோ டொக்கும்.

     4அரும்பொருள் நிலையாவது    கொல்லேறு   தழுவுதல்   வில்லேற்று
முதலியன செய்தார்க்குக் கொடுப்பது. இது   வன்மணமாதலிற்   பொருந்தாக்
காமத்தின்பாற் படும்.


    1. இது பிராசாபத்தியமெனப்படும்; “அரிமத ருண்க ணாயிழை யெய்துதற்
குரியவன் கொடுத்த   வொண்பொருளிரட்டி,   திருவின்றந்தை   திண்ணிதிற்
சேர்த்தி,    அரியதன்   கிளையோடமைவரக்   கொடுத்தல்,   பிரிதலில்லாப்
பிராசாபத்தியம்” (
தொல். களவு, 1, ந.); “கொடுத்த     பொருள்    வாங்கிக்
கொண்டபேர் ........... மடுப்பர் மடுத்தற் கமைந்தால்- அடுப்போன்,   இரண்டா
மடங்குபெய் தீவ ததுவே, இரண்டா   மணத்தினியல்பு”  (
யா. வி. 96. மேற்.)

     2. இஃது ஆரிடமெனப்படும்; “தனக்கொத்த வொண்பொருடன் மகளைச்
சேர்த்தி, மனக்கொத்த மாண்புடையாற் பேணி-இனக்கொத்த,  ஈரிடத்  தாவை
நிறீஇயிடையீவதே, ஆரிடத்தார் கண்டமண மாம்” (
தொல் களவு. 1,. மேற்.);
“இற்குலத்தோ      டொப்பானுக்     கொப்பானமிலேறாப்   பொற்குளம்பிற்
பொற்கோட்ட     வாப்புனைந்து  -  முற்படுத்து,    வாரிடம்பேராமுலையை
வாழ்க்கைக்கண் வைப்பதுரை, ஆரிடம் பேரா மதற்கு” (
யா. வி. 96, மேற்.)

     3. “நீளி நெடுநகர் நெய்பெய்து    பாரித்த,    வேள்வி   விளங்கழன்
முன்னிறீஇக்-கேள்வியாற், கைவைத்தாம்   பூணாளைக்  காமுற்றாற்   கீவதே,
தெய்வ     மணத்தார்      திறம்”  (
தொல். களவு. 1. ந.);  “மெய்ப்பாலைப்
பெண்டன்மை யெய்தியபின்மெல்லியலை, ஒப்ப  வுணர்ந்த   பொழுதுண்டல்-
ஒப்பாற்கு, நெய்தயங்குதீமுன்னர் நேரிழையை யீவதே,  தெய்வப்பே   ராகுந்
தெளிந்து” (
யா. வி. 96,மேற்.)

     4. இஃது ஆசுரமெனப்படும் “முகையவிழ்   கோதையை   முள்ளெயிற்
றரிவையைத்,தகைநலங் கருதுந் தருக்கின ருளரெனின், இவையிவை செய்தாற்
கெளியண்மற்றிவளெனத், தொகைநிலை  யுரைத்த   பின்றைப்   பகைவலித்,
தன்னவையாற்றிய     வளவையிற்றயங்கல்,   தொன்னிலையசுரந்   துணிந்த
வாறே” (
தொல். களவு. 1,.);    “வில்லேற்றல்    வேள்வியைக்   காத்தன்
மிகுவலிக், கொல்லேற்றியல்குழையைக் கோடலென் றெல்லாம்,  அரியனசெய்
தெய்தினா னாயினசுரம், மரியவா மந்த மணம்”
பர. வி. 96, மேற்.)