என்பது பாங்கன் பெயர்ந்து வந்து தலைமகற் குரைத்தது.
11. | “2தனிமை நெஞ்சத்து முனிவுகண் ணகற்றலின் வினைமாண் பாவை யன்ன புனையிழை மாதரும் போன்றதிப் பொழிலே”(16) (களவியற்.. 28. மேற்.) |
என்பது தலைமகன் அவ்விடத்துச் சென்றது.
12. | “3தெய்வ மாக வையுறு நெஞ்சம் பொய்யா தாயினின் செவ்வாய் திறந்து கிளிபுரை கிளவியாம் பெறுக ஒளியிழை மடந்தை யுயிர்பெயர்ப் பரிதே”(17) (களவியற்.. 28, மேற்.) |
என்பது தலைமகள் அணைதலுறவினாற்றான் கூறியது.
1. “கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை” (புறநா. 21: 5); “வெயினுழை
பயியாக் குயினுழை பொதும்பர்” (பெரும்பாண். 374, அடிக்)
2. “குழைமுகத்தாற் கொங்கை மலையு மருங்கால், விழியரிய நாட்டத்தால்
வேனற் - பொழிலெல்லாம், புல்லார்ப் புறங்கண்ட கண்டன் புகாரனைய
நல்லாளே யாகு நமக்கு”, “முருக்கின் புதுமலரான் முல்லை நகையால்,
நெருக்கியெழுஞ் செவ்விள நீராற் - குருக்கொடியால், நான்ற
குழைமுகத்தானானயந்த நன்னுதலைப் போன்ற துயர்பூம் பொழில்” (களவியற்..
மேற்.) “தேர்மன்னு தானை பரப்பித்தென் சேவூர்ச் செருமலைந்த போர்மன்னர்
தம்மைப் புறங்கண்டு நாணிய பூங்கழற்கால், ஆர்மன்னு வேலரி கேசரியந்தண்
புகாரனைய, ஏர்மன்னு கோதையைப் போலினி தாயிற்றிவ் வீரம் பொழிலே”
(பாண்டிக்); “கரிதாகி மென்குழல் போனிழல் போற்கலந்தால் விடுத்தற்,
கரிதாயுறவி லறவினி தாயர வல்குனிற், பெரிதாய் விரும்பின வெல்லா நுகர
பெறுவதற்கே, உரிதா யளியுடைத் தாயவர் போலு முயர் பொழிலே”
(அம்பிகாபதி. 23); “காம்பிணை யாற்களி மாமயி லாற்கதிர் மாமணியால்,
வாம்பிணை யால்வல்லி யொல்குத லான்மன்னு மம்பலவன், பாம்பிணை
யாக்குழை கொண்டோன் கயிலைப் பயில்புனமும், தேம்பிணை வார்
குழலாளெனத் தோன்றுமென் சிந்தனைக்கே” (திருச்சிற். 38.)
3. “செய்ய மலரிற் றிருமகளே யென்றுன்னை, ஐய முறுகின்றே
னல்லையேல் - உய்ய, உரைதந் தருளா யுயிர்வருமோ போனால், விரைதந்த
மேனியாய் மீட்டு ” (கிளவித் தெளிவு); “மேவியொன் னாரை வெண் மாத்து
வென் றான்கன்னி வீழ்பொழில்வாய்த், தேவியென் றாநின்னை
யானினைக்கின்றது சேயரிபாய், காவிவென் றாயகண் ணாயல்லை யேலொன்று
கட்டுரை.