கேட்பிக்கும் நெறி
   
101. +புகழ்த்தநன் னாளிற் புகன்ற முகுர்த்தத்திற்                              புட்பொருந்தின்
திகழ்ந்தநன் மங்கலஞ் சொன்முதல் யாவுந்                             தெரிந்துகொண்டு
பகர்ந்தவர் செய்யுளைப் பல்கலை வல்லோர்                               தமக்குணர்த்தி
இகழ்ந்தன நீக்கி முறையே வகுத்தல் இயல்பென்பரே.

     (உரை I.)
எ - ன், கேட்பிக்கும் நெறியுணர்த்...........று.

     (இ - ள்). நல்ல நாளின் நல்ல முகூர்த்தத்திற் கேட்பப்
பொருத்த மங்கலச்சொல் முதன் நல்லன தெரிந்துகொண்டு சொல்லிச்
செய்யும் அறிவுடையோர்க்கு உணர்த்தி இழுக்காயுள்ளன நீக்கி
வழுக்காவகை இசைத்தல்வேண்டும் எ - று.

  “பாடப் படுவோர்க்கும் பாடு மவன்றனக்கும்
நாடப் படுங்குற்றம் நாடாதே-பாடுமேல்
காகப்புட் சேரக் கனிபனையின் வீழ்வதுபோல்
ஆகத்தற் சேரு மலர்”

என்றார் தொல்லாசிரியர். (யா. வி. மேற்.) (33)