இதுவுமது
   
102. +நல்ல விடமெழு கிவ்விளக் கேற்றி நறுமலர்தூய்
நெல்லும் பரப்பித்தன் மேல்விதா னித்து நிறைகுடமும்
பல்வகை யான பிரப்புங் கொணர்ந்து பயனறிய
வல்லவர் கூடிக் கலைமகள் பாதம் வணங்குவரே.

     (உரை I).
எ - ன், கவி கேட்பிக்குமிடத்து முறைமையாமாறு
உணர்த்.....று.

     (இ - ள்), கேட்போன்றன் மனையின்கண் மெழுகி
விளக்கேற்றி நெற்பரப்பி விதானித்து நிறைகுடம் வைத்து மலர் தூவி
நல்லவர் ஒருங்கு கூடியிருந்து சொன்மகள் பாதத்தைத் துதிக்கப்படும் எ - று. (34)