பரிசில் நல்காதார்க்கு உறுவது
   
104. +பரவிய பாவலர் பாக்கொண் டவர்க்குப் பரிசிற்றிறம்
வரிசையி னல்கா தொழியினா னந்தமா மற்றவர்கட்
குரைசெய்த வெல்லாம் வசையா யுயர்ந்தோர்                               விரும்பலின்றித்
தரையினி னிற்கும் பெரும்பழி யாமென்று சாற்றுவரே.


     (உரை I).எ - ன், பரிசில் நல்காதவர்க்கு வரும் பெயர்
இன்னதென்பதுணர்த்து.........று.


     (இ - ள்).
பாவலர் உரைத்த பாக்கொண்டு அவர்க்கு
வரிசையிற் பரிசிற்றிறம் மனமகிழ நல்காது ஒழியின் அவர் முன்பு
புகழ்ந்துரைத்தன வெல்லாம் இகழ்ந்துரைத்த வசையாய் உலகின்
உயர்ந்தோராயினும் மகிழப்படாது, பூதலத்தின்கண் நிற்பதோர்
பெரும்பழியாமென்று பேசுவர் புலவர் எ - று.

“முன்னொரு வர்க்கு மொழிந்த செய்யுட்
பின்னொரு வர்க்குச் சாற்றில்
முன்னோன் பின்னே திருவு நீங்கி
வழிகிளர்ந் தோன்பாற் சேறன் மரபே”

என்பது மாமூலம்.


“யாவ ராயினும் இவ்வகை யேதன்
மூவகைக் காலத்து மொழிந்தனர் புலவர்”

என்பது செய்யுள் வகைமை.


“பாடிய புலவன் பரிசிற் றிறம்நீங்கிற்
கேடுதலைத் தருமே கேட்டோன் மருங்கினும்”

என்பது பருணர் பாட்டியல்.


“பாடிய செய்யுட் பலநாட் கிடப்பினும்
கேடென மொழிப கேட்போர் தமக்கே”
 
-திருப்பிரவாசிரியர் தூக்கியல்.(36)