புறநடை
   
105. +இறப்ப வுயர விறப்ப விழிய இசைக்குஞ்செய்யுட்
டிறத்தன யாவையுந் தீதென் றுரைப்பர்செப் பாதொழிந்த
புறத்துள வாயினுந் தொன்னு னெறிமேற் புகலப்படும்
நிறத்திற் குவளையுங் காவியும் போலு நெடுங்கண்ணியே.

     (உரை. I)
எ - ன், இவை யனைத்திற்கும் புறநடையாமாறு
உணர்த்.............று.

     (இ - ள்.) பாட்டுடைத் தலைமகனுக்குரிய வகையன்றி இறப்ப
உயர்வு வரினும் இறப்ப இழித்து உரைப்பினும் ஆனந்தமாம்; அன்றி,
இந்நூல் இயம்பாதன உளவாயினும் தொன்னூல்களில் துணிந்த
நெறியே தோற்றுவித்துக் கொள்வர் எ - று.


“இறப்ப வுயரினு மிறப்ப விழியினும்
அறத்தகை வழீஇய வானந் தம்மே”

என்பது அணியியல்.

“சிறந்த மரபிற் றேர்ந்தவ னறியப்
பன்னூல் வகுத்த பெற்றியி னோக்கி
ஏத முறாம லியனெறிப் பகுத்தல்
தீதில் காட்சித் தெளிந்திசினோர் கடனே”

என்பது பருணர் பாட்டியல்.


“எழுத்தின் வழுவே யெழுத்ததி காரத்தின்
இழுக்கி வரூஉ மியல்பிற் றென்ப”

“சொல்லின் வழுவே சொல்லதின் யாப்பிற்
சொல்லிய குற்றந் தோன்ற லாகும்”

“எழுத்தின் வழுவே தமிழ்நடை திரிவே
........................................................................”

“யாப்பின் வழுவே யாப்பின திலக்கணம்
கோப்ப வாராக் கொள்கைத் தாகும்”

எனவுரைத்தமை அறிந்து புணர்க்கப்படும்.

     ஈண்டும் இந்நூலிற் சூத்திரத்தன்றி வேறுபட்டனவெல்லாம்
உரையிற் கோடலான தந்திரவுத்தியின் வருவித்தா ரென்க.

     இச்சூத்திரத்தின் மகடூஉ முன்னிலை முதலாகிய மிகைச்
சொற்களெல்லாம் செய்யுளைநோக்கி வந்தனவென்க. (37)