நாட்களுக்குரிய எழுத்துக்கள்
   
13. அகர முதனான்கும் கார்த்திகை மற்றவற் றின்னடைவே
உகர முதலைந்தும் 1பூராட மாமென ஓதுவர்காண்
ஒகர முதன்மூன்று மோருத்தி ராட முயிர்மெய்யினில்
ககர முதனான்கு மோணமென் றோதுவர் கற்றவரே.

     (உரை - I).
எ-ன், மொழிதரு முதலெழுத்துக்கு உதாரணம்
ஆமாறு உணர்த்............று.

     அ, ஆ, இ, ஈ இவை நான்கும் கார்த்திகை; உ, ஊ, எ, ஏ, ஐ,
இவை ஐந்தும் பூராடம்; ஒ, ஓ, ஒள இவை மூன்றும் உத்திராட
மெனக்கொள்க. க, கா, கி, கீ இவை நான்கும் திருவோணம் எ - று.

     (உரை II). எ - து, நாட் பொருத்தமாமாறுணர்த்துகின்றது.

     (பி - ம்.). 1‘பூராட முத்திரா டம்மொழிந்த, ஒகர முதன் மூன்று
மேய்ந்த உயிரி லுயிர்மெய்யினில்’ (13)