இதுவுமது
   
15. *ஏய்ந்த சகர முதனா லெழுத்தும் இரேவதியாம்
ஆய்ந்த சுகர முதலைந் தெழுத்தும் அசுபதியாம்
பாய்ந்த சொகர முதன்மூன் றெழுத்தும் பரணியென்பர்
வேய்ந்த ஞகர ஞொகரஞா வான அவிட்டமின்னே.

     (உரை I). ச, சா, சி, சீ இவை நான்கும் இரேவதி. சு, சூ, செ,
சே, சை இவை ஐந்தும் அசுபதி. சொ, சோ, சௌ இவை மூன்றும்
பரணி, ஞ, ஞா, ஞொ இவை மூன்றும் அவிட்டம் எ - று.

(பி - ம்.)

1‘ ஏய்ந்த சகர மிரேவதி நாண்முதல் மூன்றினுக்கு
வாய்ந்த வெழுத்தொரு நான்கைந்து மூன்றா 
                           [மவற்றின்வர்க்கத்
தாய்ந்தஞ மூன்று மவிட்டமீ றாயின வஞ்சனத்தைத்
தோய்ந்து குழையைத் தொடருந் தடங்கட்
                              டுடியிடையே.’

     உரை I உள்ள பிரதியிற் கண்டது இது. (15)