கலம்பகத்தின் செய்யுட்டொகை
   
35. தேவர்ககு நூறு முனிவர்க் சிழிபைந்து 1சேணிலத்தைக்
காவற் குரிய வரசர்க்குத் தொண்ணூறு காவலரால்
ஏவற் 2றொழிலவற் கெண்ப தெழுப திருநிதியம்
மேவப் படுமவர்க் கைம்பது முப்பது மிக்கவர்க்கே.

     (உரை - I). எ-ன், வகுத்த கலம்பகம் வருமுறை வகுத்தது
இது என்பதுணர்த்...............று.

இவை அந்தாதி, மண்டலித்து முடியும் எனப்படும் எ-று.

“அமராக்கு நூறந் தணருக் கிழிவைந்
தரசர்க்குத் தொண்ணூறு மூன்றாம் பட்ட
முடிபுனையா மன்னர்க் கெண்பது
வணிநர்க் கெழுபது மற்றை யோர்க்குத்
துணியி லறுபத் தஞ்சு சொல்லும்.”

இது முள்ளியார் கவித்தொகை.

“அந்தணர் அரசர் வணிகர் வினைஞர்க்குத்
தொண்ணூ றெண்ப தெழுப தறுபது
விண்ணோர் தமக்கு நூறென விளம்பினர்.”

என்பது கல்லாடம்.

“அமரர்க்கு நூறந் தணருக் கிழிவைந்
தரசக்குத் தொண்ணூ றன்றி முடிபுனையாப்
புதல்வாக கெண்பது புகலுங் காலே.”

“தானைத் தலைவர்க்கும் வணிகர்க்கும் எழுப
தேனை யோர்க்கிழி பிருபது பாட்டே.”

என்பவை மாமூலம். இக்கருத்துத் தொகை கொள்க.

     (உரை - II). எ - ன், தேவதைகளைப்பாடும் பிள்ளைத்
தமிழ்க் கவி நூறு பாடவும். பிராமணருக்குத் தொண்ணூற்றைந்து கவி
பாடவும். முடிபுனைந்த மன்னருக்குத் தொண்ணூறு கவி பாடவும்.
வைசியர்க்கு எண்பது கவி பாடவும். இதிற் கீழ்ப்பட்டவர்களுக்கு
ஐம்பது, முப்பது பாடவும். இப்படிப் பிரபந்தம் பாடுவது;


     (பி - ம்.) 1 ‘ சேணிலத்துக் ’ 2 ‘ றொழில்பெற்ற மாந்தர்க்கெழுப ’

     (கு - ரை). 33, 34, 35 ஆம் சூத்திரங்களிற் கூறிய பொருளை
யெல்லாம் பின்வரும் சூத்திரம் தழுவி நிற்கிறது;

“கலம்பக மென்ப தொருபோகு வெண்பா
கலித்துறை புயவகுப்பு மதங்கம் மானை
காலம் சம்பிரதம் கார்தவம் குறமறம்
பாண்களி சித்தோ டிரங்கல் கைக்கிளை
தூது வண்டு தழையூச லென்னுமிப்
பதினெட் டுறுப்பிவை யந்தாதித துறையால்
ஐவகைப் பாவு மினமும் பொருந்த
இமையோர்க்கு நூறு மந்தணர்க்குத் தொண்ணூற்
றைந்து மரசர்க் குத்தொண் ணூறும்
வைசியர்க் கைம்பதுஞ் சூத்திரர்க்கு முப்பதும்
ஆக மொழிவர் மூதுணர்ந் தோரே”

என்பது பிரபந்த தீபம்.


     மண்டலித்து முடிவது: பிரபந்தத்தின் ஈற்றுச் செய்யுளின் ஈறும்,
முதற்செய்யுளின் முதலும் ஓன்றாக அமைவது. (10)