பல்சந்தமாலை, வெண்பாவந்தாதி, கலித்துறையந்தாதி,
தொகை வெண்பா
   
38. +பத்தாதி நூறந்தம் பல்சந்த மாலையந் தாதிவெண்பா
வைத்தார்க ணூறு கலித்துறை தன்னையும் மற்றவெண்பா
ஒத்தான வைம்ப தெழுபது தொண்ணூறும் பேர்பெற்றதாய்
இத்தா ரணியிற் புலவரெல் லாரும் இயம்புவரே.

     (உரை I).
எ - ன், பல்சந்த மாலையும் வெண்பா வந்தாதியும்
கலித்துறை யந்தாதியும் முத்தொகை வெண்பாக்களும் ஆமாறு
உணர்த்...........று.

     (இ - ள்). பல சந்தங்களும் பத்து முதல் நூறளவும் வருவது
பல்சந்த மாலையாம்; வெண்பா நூறுவரின் வெண்பாவந்தாதி;
கலித்துறை நூறு வரின் கலித்துறை யந்தாதி; வெண்பா ஐம்பதானும்
எழுபதானும் தொண்ணூறானும் வந்தாற் பேர் பெற்று முடிவது
அந்தத் தொகை வெண்பாவாம் எ - று.

     சந்தமென்பது நான்கெழுத்து முதல் இருபத்தாறெழுத் தளவும்
ஒரோவடியான் ஒத்து வருவது.

     வெண்பாவென்பது ஆசிடை நேரிசை வெண்பா; கலித்துறை
யென்பது கட்டளைக் கலித்துறை. தொண்ணூறு மென்ற உம்மையான்
தொள்ளாயிரமும் பிறவுமாய் வரும்.

“சந்தத் தொருபது பல்சந்த மாலை
அந்த வெள்ளை ஐம்பதான் எழுபதான்
என்கஊர்ப் பேரோ டுறுமா வியல்பே
அகவறனையு மவ்வழி வரையார்”

என்பது முள்ளியார் கவித்தொகை; ஆகலின் ஆசிரியங்களும்
இவ்வாறு வருக வெனக்கொள்க. இன்னிசை வெண்பாக்களும்
(ஐம்பதும்) எழுபதும் தொண்ணூறுமாய் வருவன அறிந்துகொள்க.


     (கு - ரை.)
பல்சந்த மாலை பத்துமுதல் நூறு கவிகளால்
ஆனது; அதில் பத்துச் சந்தங்கள் பயின்று வரும்; ‘பத்துக்
கொருசந்தம் படிப்பா நூறாக, வைத்தல்தான் பல்சந்த மாலையாம்
(பிரபந்தத் க. 5) ‘பத்துச் செய்யுளில் ஒவ்வொரு சந்தமாய் ஒரு
நூறுரைத்தலே’ (பிரபந்ததீ. 28). பத்துமுதல் நூறுசெய்யுள் வரை
பாடப்படுவது என்று சிதம்பரப் பாட்டியலும கூறும்.
தொள்ளாயிரமும என்றது அரும்பைத் தொள்ளாயிரம் போன்ற
நூல்களைநோக்கிப் போலும். (13)