|
பாதாதி
கேசம், கேசாதி பாதம், அங்கமாலை
|
|
|
43.
|
கடிதலில்
லாக்கலி வெண்பாப் பகரும் அவயவங்கள்
முடிவது கேசமக் கேச முதலடி ஈறும்வந்தாற்
படிதிகழ் பாதாதி கேசமுங் கேசாதி பாதமுமாம்
1மடிதலில் வெண்பா விருந்தம் பலவங்க மாலையென்னே. |
(உரை
I). எ - ன். கேசாதி பாதமும் பாதாதி கேசமும்
[அவயவங்கள் வெண்பா மரபும்]? உணர்த்......................று.
(இ - ள்). கலிவெண்பாவினாற் பாதமே
தொடங்கிக்
கேசாந்தமாய்வரிற் பாதாதி கேசமாம்; கேசமே தொடங்கிப்
பாதாந்தமாய்வரிற் கேசாதி பாதமாம்; வெண்பாவானும்
விருத்தங்களானும் வருவது அங்கமாலையாம் எ - று.
(உரை II). எ - து....................பாதாசிகேசப்
பிரபந்தமென்றும்
கேசாதிபாதப் பிரபந்தமென்றும் சொல்லப்படும். வெண்பாவினாலே
நூறும் ஐம்பதுமாக உறுப்புக்களைச் சிறப்பித்துப் பாடுவது
அங்கமாலையென்று வழங்கப்படும் எ - று.
(கு - ரை) தெய்வங்களுக்குப் பாதாதி
கேசமும்
ஏனையவர்களுக்குக் கேசாதி பாதமும் கூறுதல் மரபென்பர்.
(பி
- ம்). 1 முடிதலில் வெண்பாவீ ரைம்ப தவையங்க
(18)
|