உலா, தூது குழமகன்
   
45. தெருவினிற் பேதை முதலெழு வோர்கள் 1திறத்துவகை
ஒருவனை யேத்துங் கலிவெண்பா தூதுலா ஒண்டொடியாய்
2மருமலர்க் கையிற் குழமகன் மேல்வைத்த மன்னவர்க்குத்
தருகலி வெண்பாக் குழமக னாமென்று 3சாற்றுகவே.

     (உரை I). எ - ன், உலாப்புறமும் குழமகனும்
ஆமாறுணர்த்...........று.

     (இ - ள்). தெருவின்கண் பேதை பெதும்பை மங்கை
மடந்தை அரிவை தெரிவை பேரிளம்பெண்ணென ஏழும் வழுவாது
வேட்டோர் தமக்காக்கலும் காவலர் தமக்கும் உரிமை களவென
உணர்தல் வேண்டுமென்ப. “பேணுதகு சிறப்பிற் பெண்மக வாயின்,
மூன்றா மாண்டின் மொழிகுவ குழமகன்.”

     (உரை II). எ - து. எழுவகைப் பருவத்துப் பெண்களும்
தெருவினில் திருவுலாப்புறத்து வருகிறவனைக் கண்டு மயங்கி
மயலெய்தியதாகக் கலிவெண்பாவினாலே கூறுவது உலாவென
வழங்கப்படும். தூது பாடுவதும் குழமகன் பாடுவதும் இக்கலிவெண்பா
வெனப்படும் எ - று.


     (பி - ம்.) 1 ‘டிறத்துக்கமை’ 2 ‘வருமகற்’ 3 ‘சாற்றுவமே’ (20)