கோவை, நாழிகைக் கவி
   
54. பொருளதி காரத் 1திறத்தைப் புகன்று கலித்துறைகள்
வருவது நானூறு கோவையென் 2றாகுமவ் வானவர்க்கும்
அரசர் தமக்கு மறிய உரைத்த 3கடிகைகளை
உரைசெய்யுண் முப்பத் திரண்டுவெண் பாவென                                     ஓதுவரே.

     (உரை I).
எ - ன், கோவையும் நாழிகைக் கவியும் உணர்த்........று.

     (இ - ள்), அகப்பொருளையுடைய நானூறு கலித்துறை
[யாக்குவன விதத்தால் வளப்படுத்த] கோவையாகும்; அவை அரசர்
கோவை, பாண்கோவை
போல்வன. அரசர்க்கும் வானோர்க்கும்
உரைக்கும் கடிகைகளை முப்பதிரண்டு வெண்பாவினால் உரைப்பது
நாழிகைச் செய்யுளாம் எ - று.

     (உரை II). எ - து, பொருளதிகாரத்துட் பிரமம், பிராஜா
பத்தியம், ஆரிடம், தெய்வம், காந்திருவம், அசுரம், இராக்கதம்,
பைசாசம் என்று சொல்லப்பட்ட எட்டுவகை மணத்தினுள் காந்திருவ
மணத்தில் நானூறு கலித்துறை பாடுவது கோவையென்று வழங்கப்படும்
; வெண்பா முப்பத்திரண்டு பாடுவது கைக்கிளை யென்று
வழங்கப்படும் எ - று.

     (கு - ரை). அரசர் கோவை, களவியற்காரிகையுரையில்
அரையர்கோவை என்னும் ஒரு நூற் பெயர் காணப்படுகின்றது.
நாழிகைச் செய்யுள், நாழிகைக்கவி, நாழிகைவெண்பா, கடிகை
வெண்பா என்பன ஒரு பிரபந்தத்தையே குறிப்பனவாகும்.(29)

     (பி - ம்.) 1 ‘தறத்தை’ 2 ‘றாகுவ’ 3 ‘படிகைக்கிளை’ .