|
இதுவுமது
|
|
|
64. |
விருப்பந்
தருஞ்சுவை பாவ 1விகற்ப மிகுபாக்களால்
உரைத்த வினத்தா லுரையோ டுடன்பட மெல்லவந்து
சருக்க மிலம்பக மாம்பரிச் சேதமென் னும்பெயரே
தெரித்து வருவது செப்பிய காவியந் தேமொழியே. |
(உரை I).(இ
- ள்). ஆன்றோர் விரும்பும் சுவையும்
பாவவிகற்பமும் என்னும் அலங்கார முடைத்தாய்ப் பாக்களாற்றான்
இனங்களாற்றான் உரையோடு பாடை விரவித் தான் வருவது சருக்க
மிலம்பகம் பரிச்சேத மென்னும் கூறுபாட்டையுடைத்தாய் ஒரு பெயரும்
தெரியவரும் பெருங்காப்பியம் எ - று.
(கு - ரை). சருக்கம் முதலியன நூலின் பிரிவுகள் : காண்டம்
படலம் முதலியனவும் கொள்ளுக.
(பி - ம்.)
1 விளக்க (39)
|