இசைச்செய்யுட் டிறம், இவ்வியலுக்குப் புறநடை
   
68. பாவா னவையிசை தம்மிற் பயிறலப் பாவினத்தில்
தாவாத வெண்செந் துறைசந்தந் தாண்டகம்                             1தாமனைத்தும்
மேவாத வல்ல வினைப்பாத் தமிழ்2 வெற்பின் வேதமுனி
நாவார் 3தமிழ்நடைக் கேபுணர்த் திக்கொள்க                                நன்னுதலே.

     (உரை I) எ - ன், இசையுடன் வரும் செய்யுட்டிறமும்
இவ்வோத்திற்குப் புறநடையும் ஆமாறு உணர்த்.....று.

     (இ - ள்), பா நான்கும் இசையொடு பயின்று,
பாவினங்களுள்ளும் வெண்செந்துறைமேல் சந்தமும் தாண்டகங்களும்
பயின்று வருவனவாம். வண்ணத் துறையாக நின்ற செய்யுள் மேல்
வரும் பொருட்டிறம் உள்ளனவும் பிறவும் திருமுது பொதியிற் றெய்வ
முனிவர் அருளிய பாவியல்களும் பாட்டியல்களும் வந்தனவெல்லாம்
முறையே அறிந்து கொள்க எ - று.

“சந்தம் தாண்டகம் வெள்ளைச் செந்துறை
இன்னவை யின்றி யமைந்த விசைத்திறம்
எல்லாம் பாவினத் தியன்ற வன்றே”

என்பது மாமூலம்.

“இசையினுட் பாக்க ளியலா வாயின்
இசைத லிற்றென வுரைக்கவும் படுமே”

என்பது செய்யுள் வகைமை.

    
அஃதேல் கவிப்பாவெல்லாம் தேவபாணியென இசையோடு
புணர்ப்பரன்றோவெனின், அவை இன்று வேண்டாத
ஆசிரியப்பாட்டாக்கி உரைக்கும் எ - று.


     (பி - ம்) 1 ‘தாமமைந்த’ 2 ‘வெற்புடன் வேதமுள்ள’ 3
‘தமிழ்நடை தன்னை யுணர்ந்துகொள்’ (43)