|
இதுவுமது
|
|
|
74.
|
ஈதலும்
வேட்டலு 1மோதலும் வேதம் இயற்றுவிப்பார்
ஆதலு மங்கி யயனோ 2டுவமை யவரெனவே
ஓதலும் பூசுர ரென்றலு நான்மறை யோர்க்குரிய
போதினும் வெற்பினு நாவினு மேவும் புனையிழையே. |
(உரை I). எ-ன், உரைத்த வேதியர்க்கு உரிய தொழிலும்
பிறவும் உணர்த்..........று.
(இ - ள்.) பொருள் கொடுத்தலும்,
வேட்டலும். வேதம்
ஓதுதலும், ஏற்றலும், வேட்பித்தலும், ஓதுவித்தலும், அக்கினி முகம்
வளர்க்கையால் பிரமனுக்கு ஒக்குமெனப் பெறலும் பூமியிற் றேவர்கள்
என்பித்துக்கோடலும் நான்மறை யோர்க்கு நாட்டப்பட்டன எ - று.
ஒத்தவை சிறப்புடைய; மற்றவை சிறப்பில.
(கு - ரை.) இயற்றுவிப்பார்; ஈதல்
முதலிய மூன்றையும் தனித்
தனி இயற்றுவிப்பவர்; எனவே ஏற்றல், வேட்பித்தல், ஓதுவித்தல்
என்ற தொழில்களையுடையவர் என்றபடி, அங்கியோடு உவமை
கூறத் தக்கவர்;தாம் வளர்த்த கனலே யன்னார், தழல்புரை வேதவாணர்
(வி, பா. 1. 5 :60, உ. 1 : 103).
(பி
- ம்.) 1 மோதலு மாங்க தியற்றுவிப்பார் 2
டுவமையு
மல்லவரெண் மாதவர் (6)
|