|
மன்னவர்
இயல்பு
|
|
|
75. |
+பூவை நிலைபக லோன்கழல் போற்றல் புனைதல்முடி
தேவ ருவமைசிங் காசனஞ் செங்கோல் குடைகவரி
காவல் நிகழ்த்த லெரிவேட்ட லோதல் கடலமுதம்
மேவ லடுகளம் வேட்டல்பண் பாயின வேந்தர்கட்கே. |
(உரை
I). எ - ன், மன்னவர்க்குரியன இவை யென்பது
உணர்த்..............று.
(இ - ள்). பூவை நிலையும், ஆதித்தனைப்
போற்றலும்,
முடிசூடுதலும், தேவரோடு உவமித்தலும் தெளிதரச் சேவை பண்ணச்
சிங்காதனத்து இருத்தலும், செங்கோன் முறைமையும், வெண்குடை
நிழற்றக் கவரிவீச விரும்பினாராதலும், காவற்றொழிலும், அக்கினி
வேட்டலும், கலைகள் ஓதலும், அமுதுணவுண்டலும், களம்வேட்டலும்
[ஆம் இப்பதினான்கும்] அரசர்க்குரிய வென்றலும் அவரைப் புகழுஞ்
செய்யுளின் வருக (என்றலுமாம்) எ - று.
இளைய
னாயினும் மணிமிடி கவித்தலின்
அரசு தொழி லல்லது பிறிதுதொழில் பெறான் |
என்பது பொய்கையார்
கலாவியல்.
(கு - ரை). பூவை நிலை : பு.
வெ. 192. பகலோன்கழல்
போற்றல் : நின்றவெம் பருதி தோற்றந் தொழுதுதம் நியம முற்றி
(வி. பா. உ. 24) (7)
|