|
இதுவுமது
|
|
|
78. |
உறுவது
கோடல் வருபயன் தூக்கல் உழவின்றொழில்
இறுவதஞ் 1சாமை யிடரிற் றெளிதரல் ஈட்டுதற்கு
நெறிபல போதல் முனிவில னாதல் 2நிரைவளையாய்
குறியென லாகுங் குலவணி கர்க்குக் குவலயத்தே. |
(உரை I). எ - ன், இதுவும் வணிகர்க்குரிய பொருளிவை
யென்பது உணர்த்........று
(இ - ள்). உறுவது கோடல், வருபயன்
தூக்கல், உழவின்
தொழில், இறுவதஞ்சாமை, இடரிற் றெளிதரல், பொருள் தொகுத்தற்குப்
பலவழியும் நடத்தல், முனிவு தவிர்தல் என்னும் எழுவகையும்
வணிகர்க் குரியன. இவை இவரைப் புகழும் செய்யுளின் கண் வருக
எ - று.
(உரை II). எ - து, வணிகர் அறுவகைத்
தொழில்.
(கு - ரை). இறுவது - நஷ்டப்படுவது.
இடரில் தெளிதரல் -
துன்பம் வந்தபோது தேற்றம் கொள்ளல். (10)
(பி
- ம்.) 1 சாம லிடத்திரு மாலடி யேத்திமறை
2 நிரை
வளர்த்தல்
|