|
செய்யுள்
மொழியின் முறைமை
|
|
|
81. |
தானைத்
தலைவரை யேவல்பெற் றாரைத் தனிவெண்குடைக்
கோனை யடுத்த பகைவரைக் கூறுலுங் கோற்றொழிலால்
ஏனைக் குறுநில மன்னவர் தங்களை மன்னரென்ன
மானப் புகழ்தலுஞ் செய்யுண் மொழியின் மரபென்பரே. |
(உரை
I). எ - ன், ஒருசார் அரசர்க்கோதிய இலக்கணம்
உணர்த்........று.
(இ - ள்). தானைத் தலைவரை, ஏவல்
பெற்றாரை, தமது
நாயகமாகியவரை அடுத்தவரது பகைவரைக் கோன்றொழிலாற்
கூறலும், ஒழிந்த குறுநில மன்னரை முடியுடை மன்னவர் போல
உரைத்தலும் செய்யுண் மொழியின் முறைமை எ - று.
அரச
னருள்பெறி னெல்லார்க்கு முரித்தே
காணிகை தவிர்தலும் விரித்துரை வேண்டலும்
ஓங்கிய சிந்தையொடு தெய்வம் பணிதலும்
அறுபது முதலா வைம்பதிற் றிரட்டி
அனைவர்க்கு முரித்தே யாயுங் காலே |
என்பது பொய்கையார்
கலாவியல்.
(உரை
II). எ - து, தானைத்தலைவர் முதலாகிய பேர்களைக்
1குற்றளவுப் பாட்டினால் பாடலாம். குறுநில மன்னரை முடி புனைந்த
மன்னர்க்குச் சமமாகப் பாடலாம் எ - று.
(கு - ரை.) தானைத்தலைவரை - சேனாபதிகளை.
ஏவல்
பெற்றாரை - அரசன் ஏவும் காரியங்களைச் செய்யும்
உத்தியோகஸ்தரை ; 35 ; 40, உரை.
(பி
- ம்.) 1 குற்றளவும் (13)
|