செய்யுள் செய்வதோர் திறம்
   
83. +சாற்றுத் தலைவ னியற்பெய ரூர்க்குத் தகவெதுகை
தோற்றினு மப்பெயர் சொல்லுமப் பாகங்கள் துன்னுமச்சீர்
ஏற்ற வெழுத்து வரினு மியைந்த தியற்பெயர்க்கே
ஆற்றும் பொருத்த மனைத்தும் பொருந்துத லாஞ்சிறப்பே

     (உரை I). எ - ன், செய்யுள் செய்வதோர் திறம் உணர்த்.......று.

     (இ - ள்). பாட்டுதை் தலைமகன் இயற்பேர்க்கு ஆதல்,
அவன் ஊர்ப்பேர்க்கு ஆதல் எதுகைத்தொடையோடு புணர்ப்பினும்,
இவை யிரண்டு பெயர் வைக்கும்படி இவையிற்றின் கண் உளவாகிய
இனவெழுத்து அடிமுதற்கண் தோன்றி நிற்பினும் முன் சொல்லப்பட்ட
பொருத்தம் அனைத்தும் இயற்பெயர்க்குப் பொருந்துதல் சிறப்புஎ - று.

“திருவினா சிரியர் தூக்கிய லுரைத்தன
யாவையு மியற்பெயர்க் கல்லது
பொருத்தம் வேண்டார் புலமை யோரே”

என்பது கல்லாடம்.

     இவற்றால் தசாங்கத்திற்கென்று எய்துவித்தன எல்லாம்
இயற்பெயர்க்குப் பொருந்த வைப்பின் ஒழிந்தவையிற்றுக்கு
வழுக்கினும் இழுக்கில்லை எ - று.

     (கு - ரை.)
பொருத்தவியலில் இச் சூத்திரம் சிறிது வேறு
பாட்டுடன் காணப்படுகிறது ; சூ .8. (15)