|
நல்லவை
|
|
|
88.
|
+அறந்திறம்
பாநல் லறிவோ ரறுபத்து நாற்கலையும்
திறந்தெரிந் தோர்சினஞ் செற்றம்பொய் காமம்
சிதைக்குஞ்சித்தம்
மறந்தொரு காலு மொருபாற் படாதவர் 1மற்றுங்குற்றம்
துறந்தவர் தாங்களும் நல்லவை யாமென்று சொல்லுவரே. |
(உரை I). எ - ன், நல்லவை ஆமாறு உணர்த்..........று.
(இ - ள்).தருமநெறி கோடாத அறிவோர்,
அறுபத்து
நாலுகலைகளும் இயற்றுங் கூறுபாடும் அறிவோர், சினமும் வயிரமும்
பொய்யும் காமமும் நீத்தோர், சித்தம் ஒருதலைப்படாது எல்லாக்
குற்றமுந் தீர்ந்து நின்றோர் குழுமி இருப்பது நல்லவையாம்
எ - று. (20)
|
|
|