நிறையவை
   
89. +பாங்கா யொருதிறம் பற்றா தவர்பல் கலைப்பொருளும்
ஆங்கே யுணர்ந்தோ ரடக்க முடையர் அவரவர்கள்
தாங்கா தலித்து மொழிவன கேட்போர் தருமநெறி
நீங்காத நாவ ரிருந்திடு கூட்டம் நிறையவையே.

     (உரை I)
. நிறையவை யாமாறு உணர்த்........................று.

     ஒருவர் பாங்காகி ஒருதிறம் பற்றாதோர், எல்லாப் பொருளும்
தாங்கள் உணர்ந்தோராயினும் அவரவர் உரைக்குமாறு
முற்றக்கேட்போர், அறநெறி நீங்காத அந்தணர் முதலாய் அரசர்
வணிகர் வினைஞர் கூட்டம் நிறையவையாம் எ - று.

     எனவே அரசன் மூலமாக இருப்பதாம். (21)