தீயவை
   
90. +சொற்ற படிசொற்றாம் பெய்பவர் சொல்லுநற்
                                சொல்லினையும்
குற்றமி தென்று குலாவி யுரைப்பவர் கூறும்பரி
சுற்ற துணர்ந்தோ ரொருபாற் படுபவர்                              பொய்யுரைப்போர்
செற்றஞ் சினத்தொடு சேர்ந்தோ ரிருப்பது தீயவையே.

     (உரை I). எ - ன், தீயவை யாமாறு உணர்த்.......................று.

     (இ - ள்). உரைத்த கருத்துணர்த்தி அச்சொற்களிலாகும்
பொருள் காண்பார் வாய்த்தடுமாற்றச் சொல்லினையும் குற்றமாக
எடுத்து நாட்டுவோர், உரைத்த பொருள் முடிவு பாராதே
உத்தேசத்தைக் கொண்டு ஒரு பக்கம் சாரத் தமது மேற்கோள்
முடிய நில்லாது வேண்டின வந்ததுரைப் போர், மறமும் சினமும்
மிக்கிருப்போர் இருப்பது தீயவை யாம் எ - று. (22)