வாதினில் வல்லவர் ஆவார்
   
93. +கதம்பட லின்றிக் கருதிய மேற்கோளும் எய்துவிக்கும்
மதம்படக் கூறி யெடுத்துக்காட் டேற்றி அளவைநெறி
விதண்டைவா தஞ்சற்ப மென்னு மிவற்றின்மே                                 லோருரைத்த
மதங்க நெறிசொல்ல வல்லவர் வாதினில் வல்லவரே.

     (உரை I).
எ - து, பொருட் பேசுமாறுணர்த்துத...........று.

     கோபமின்றித் தன்னாற் கருதப்பட்ட மேற்கோளுக்குத் தக்கன
எடுத்துக்காட்டிச் சமன்செய்து உடன்பட்ட பிரமாண நெறிகளான
விதண்டை, வாதம், சற்பம் என்னும் மூன்றினும் வேண்டியதென்று
இந்நெறிபுணர்ப்பர் சான்றோர் உரையோடு சொல்லி முடியா வாத
நெறியினவர் எ - று.

     “இவற்றுள்,.............டமெனவீ............வும் வாராதென்க ; ஆங்
கொருமையுஞ் சார்ந்து மருங்குரைத்தல் வேண்டுவார் விதண்டை
வேண்டாரெனக் கொள்க” என்பது கல்லாடம். (25)