செய்யுட் செய்வார்
   
97. +இயலிசை நாடக மெய்யே யுணர்ந்தோர்கள்                                  எப்பொருளும்
மயலற வாய்ந்தோர் வருணங்கள் நான்கினும்                                  வந்துதித்தோர்
உயர்நெறி நின்றோ ரவையையுற் றோரொரு                                 தெய்வத்தையே
முயல்தரு சித்தத்தர் செய்யுண்முன் பாட மொழிந்தவரே.

     (உரை I). எ - ன், செய்யுட் செய்வாரை யுணர்த்........று.

     (இ - ள்). இயலிசை நாடகம் உணர்ந்தோர், எல்லாப்
பொருளும் மயக்கந்தீர உணர்ந்தோர், மறையோர் முதலிய
வருணநான்கின் ஒன்றின் வந்து அவதரித்தோர், உயர்ந்த நெறி
நின்றோர், அவை யாரானும் மதிக்கப்பட்டோர், ஒரு தேவதையை
விடாத சித்தத்தோர் இவர் பாடத் தகுபவர் எ - று, (29)