|
செய்யுட்
செய்யலாகாதார்
|
|
|
99. |
மூன்று
தமிழின் முறையுண ராதவர் நாற்குலத்திற்
சான்றவ ரல்லவர் தாழ்ந்த வுறுப்பினர் 1தாம்பிணியிற்
றோன்றுந் துயரத்தர் தெய்வந் தொழாதவர்
தூய்மையில்லோர்
ஆன்றவர் பாடிடி லானந்த மாமென் றறைவர்களே. |
(உரை I). எ - ன், செய்யுட் செய்யலாகாதாரை யுணர்த்.........று.
(இ - ள்). தமி்்ழ் மூன்றின் தன்மை
யுணராதவர், நான்கு
வருணத்தினும் தாழ்ந்தோர்..............வன்பிணியுற்றோர், தெய்வம்
பேணாதவர், நெறிநில்லோர் யாவர் அவர் செய்யுட் செய்யின் அஃது
ஆனந்தமாம் எ - று.
மங்கலப்
பாட்டுப் பரிசியா மொழியின்
பங்கப் படுமெனப் பழித்தனர் புலவர்
அரசர்க்குக் கொற்றக் குடைவெண்பாச் சீரிய
மெய்க்கீர்த்தி முறைமை மங்கலச் செய்யுட்
செயப்பெறா தாரென் றிவர்களைப் புணர்ப்பினும்
தன்னை மொழியினும் பின்னை மொழியினும்
இன்ன நெறியோ ரியம்பல் வேண்டும் |
என்பது செய்யுள்
வகைமை. பாவின் யாவரையும் முற்படப்பாடு
மவையிற்றுக்கு இப்பெற்றியோர் உரைத்தல் சிறப்பிலவென்க.
(உரை II). எ - து, இயலிசை நாடகமென்ற
மூன்று தமிழும்
வல்லவனாய், பிராமணன் க்ஷத்திரியன் வைசியன் சூத்திரனென்ற
நான்கு சாதிக்கு உட்பட்டவனுமாய், உறுப்பு ஊனமில்லாதவனுமாய்,
வியாதியில்லாதவனுமாய், துயரு மில்லாதவனுமாய், நல்லொழுக்க
முடையவனுமாய், தெய்வபக்தியுடையவனுமாய் இருக்கின்றவன் கையிற்
பிரபந்தங் கொள்ளலாம்; இவையல்லாத கீழ்ச்சாதியாய், உறுப்புக்
குறைந்தவனுமாய், நன்றாகக் கல்லாதவனுமாய்,
ஒழுக்கமில்லாதவனுமாய், தெய்வபக்தி யில்லாதவனுமாய் இருக்
கின்றவன் கையிற் கவிதை கொள்ளலாகாது; இஃதறிந்து தனக்கு
மேற்சாதியானாய், கற்றவனுமாய், அழகுடையவனுமாய்த் தெய்வபக்தி
யுடையவன் கையிற் கவிதை கொள்க. இப்படிக் கவிதை கொண்டால்
செல்வமிகுத்துச் சிறப்புத் தனதாகிப் பலபகலும் தான் படியில்
வாழ்ந்திடும்.
(பி - ம்). 1 வெம்பிணியர்
(31)
|