மறையவர்கோன்சென்னியினும்வைத்தெமையாள்செந்தே னிறைவகுளப்பூங்கண்ணியன். | (16) |
இவையிரண்டும் வினைக்குறிப்புக்கொண்டுமுற்றிய யுகளகாந்திய குளகம். கண்ணியைப் புனைந்தவனென்னும் வினையைக் குறிப்பினாற் கொள்ளக்கிடந்தமையானென் றுணர்க. என்னை? “காலந்தாமேமூன் றெனமொழிப” “இறப்புநிகழ்வுமெதிர்வுமென்றா, வம்முக்காலமுங் குறிப்பொடுங்கொள்ளு, மெய்ந்நிலையுடையதோன்றலாறே” என்றாராகலின். ஆதலால் வினைக்குறிப்பிற்குங் காலமுண்டெனக் கொள்க. திணை - இதுவுமது. துறை - பழிச்சினர்ப்பரவல். முழுக்கலையற்றரைக்கலையுமிழந்தாய்தோகை முருந்துறுபீலியின்முழுதுமுன்றில்சீக்கு மொழுக்குறநின்றனையுடையுமஃதேயானா யுன்விரதமெதுபெயரேதுரைத்தியென்னா வழுக்கறவேயியங்குயிர்கொல்லாமையாசீ வகனாகவிறைவன்யாரருகனில்யா திழுக்கியல்பின்றாந்தனியூர்யாதுசெம்பொ னெயிலெனவவ்வெயிலெவணென்றிசைத்துமீட்டும் | (17) |
எப்படிவந்தோன்றியதப்படிவத்தெல்லா மின்னுயிருண்மையையுணராயியங்கற்பால வப்படிவத்துயிருளதாயுணர்ந்தாயீசற் கருத்துமுறையினிலருத்தியறத்திற்கேற்ற துப்புரவுண்பதுகடனென்றுள்ளாயாகத் தொழிலிகழ்ந்தாய்சுடர்சொருபாம்வேதமார்க்கந் தப்பினையெம்மறைகொடுசாதிப்பதென்றே சமண்மதத்தைப்பழித்தனராயழித்துச்சாய்த்தார் | (18) |
இவையிரண்டும் வினைப்பெயர்கொண்டுமுற்றிய யுகளகாந்திய குளகம். திணை - பாடாண். துறை - “அமரர்கண்முடியுமறுவகையானு” மென்றதனால் முனிவர்வாழ்த்து ; பார்ப்பனவாழ்த்துமாம்.
|