பக்கம் எண் :

  

8. கூளி கூறியது

268.

அனந்த சதகோடி தேவராலும்
      அனந்த சதகோடி யோகராலும்
அனந்த சதகோடி நாகராலும்
      அளந்த றியொணாத நீதிகாணுமே.

(1)
 

வேறு

 

269.

மன்னவனு மானத்தா லனைத்துங் கூறி
      வாக்கிறந்த மெய்ஞ்ஞானம் வகுக்குங் காலை
முன்னவனும் வாய்மலரா தாலி னீழல்
      மோனங்கொண் டிருந்தனனான் மொழிவ தேயோ.

(2)
 

சரத மீதால்.

270.

சேய்கிடந்த பொருளதனை யணுகி நோக்கித்
      தெரிந்ததுபோன் மாலயற்குந் தெரியா நீதி
பேய்கிடந்து பிதற்றுமெனக் குறிக்கொ ளாது
      பெரிதாக விதுதன்னைப் பேணும் பேணும்.

(3)
   

271.

சீற்றமிகு மஞ்ஞனெனு மிகல்கூர் பாசன்
      சேர்ந்தமா யாபுரத்தின் றிண்மை தன்னை
மாற்றுரையார் மெய்ஞ்ஞான வேந்தை யன்றி
      மற்றையதன் வலிசிறிது வகுப்பக் கேண்மின்.

(4)
 

மாயாபுரத்தின் அமைப்பு

 
 

வேறு

 

272.

மாதாபி தாமதலை மனைவியென வீழ்வோருக்
காதாரம் போன்றேறா தாழ்விக்கு மகழினதால்.

(5)

269. மன்ன - நிலைபெற. அனுமானத்தால் - அனுமானப் பிரமாணத்தால். முன்னவன் - தட்சிணாமூர்த்தி. “ஞான மலாதபாத முரையாடி ஞான முரையாடுகாலை யரனார், மோனம லாதுகூற முடியாமல் யாது மொழி யாரி தியாவர் மொழிவார்” அஞ்ஞவதைப்.

270. “பேயுரை யாடுகின்ற தெனநீர் கொளாது பெரிதாக வுன்னு மிதுவே” அஞ்ஞவதைப்.

271. பி- ம். ‘குறிகளோது’

272. ”மாதா பிதாமாது லன்றார மகவென், றாயாவ ருஞ்சுற்றம் வீழ் வோர்க ளேறற் காதார மேபோல வமிழ்விக்கு மன்றே” அஞ்ஞவதைப்.