பக்கம் எண் :

130தொல்காப்பியம்-உரைவளம்

(உ-ம்)

“எமக்குநயந் தருளினை யாயிற் பணைத்தோள்
நன்னுதல் அரிவையொடு மென்மெல இயலி
வந்திசின் வாழியோ மடந்தை
தொண்டி அன்னநின் பண்புபல கொண்டே”1      (ஐங்குறு-175)

இது அவட் பெற்று மலியுந் தலைவன் கூற்று.

இனி, உள்ளப் புணர்ச்சியானின்றி யியற்கையிடையீடுபட்டுழி, பின் தலைமகள் குறியிடங் கூறியவழி யதனைப் பாங்கற் குரைத்தற்குச் செய்யுள்:

“அணங்குடைப் பனித்துறைத் தொண்டி அன்ன
மணங்கமழ் பொழிற்குறி நல்கினள் நுணங்கிழைப்
பொங்கரி பரந்த உண்கண்
அங்கலிழ் மேனி அசையியல் எமக்கே” 2      (ஐங்குறு-174)

எனவுஞ் சிறுபான்மை வரும்.

“காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்
மாணிழை கண்ஒவ்வேம் என்று” 3      (குறள்-1114)

இது தலைவியைப் பகற்குறிக்கண்பெற்று மலிதல்.

“மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன்”4      (குறள்- 1116)

இஃது இரவுக்குறிக்கண் தலைவன் அவட்பெற்று மலிந்தது.


1. கருத்து: பக்கம் 109-ல் காண்க.

2. கருத்து: பக்கம் 121-ல் காண்க.

3. கருத்து: குவளை மலரானது இவள் கண்ணைக் காணின் ஒவ்வேம் என்று தான் கவிழ்ந்து நிலத்தைப் பார்க்கும்.

4. கருத்து: மீனானது மதியையும் மடந்தை முகத்தையும் பார்த்து உண்மையறியாமல் தானிருந்த விடத்திலேயே கலங்கிக் கிடந்தது.