பக்கம் எண் :

48தொல்காப்பியம்-உரைவளம்

உரையிற் கோடலான் மொழிகேட்க விரும்புதலுங் கூட்டிய தெய்வத்தை வியந்து கூறுதலும் வந்துழிக் காண்க.

வெள்

இது மேற் குறித்தவாறு காதலர் இருவரும் ஒருவர் குறிப்பினை மற்றவர் குறிப்பு ஏற்றுக் கொண்ட பின்னர் நிகழ்வதே அன்பின் ஐந்திணைக் களவொழுக்கமாம் என்பது உணர்த்துகின்றது.

(இ-ள்) : ஒருவரது கண்ணின் குறிப்பு மற்றவரது கண்ணினாற் குறிக்கப்பட்ட உள்ளக் குறிப்பினை உள்ளவாறு ஏற்றுணரவல்லதாயின் பின் கூறப்படுவன நிகழும் என்று கூறுவர் உள நூலாசிரியர், எ.று.

ஆங்கவை என்றது-வேட்கை முதலாகச் சாக்காடு ஈறாகப் பின்னர்க் கூறப்படும் உணர்வு நிலைகளை.

இந்நூற்பாவில் வரும் ‘அவை’ என்னும் சுட்டு கண்ணினான் வரும் குறிப்புரையினைச் சுட்டியது எனக் கொண்டார் இளம்பூரணர். அவை என்பது புகுமுகம் புரிதல் முதலாக இருகையும் எடுத்தல் ஈறாகப் பின்னர் மெய்ப்பாட்டியலிற் கூறப்படும் மெய்ப்பாடு பன்னிரண்டனுள் ‘பொறிநுதல் வியர்த்தல்’ முதலிய பதினொன்றனையும் சுட்டியது எனக் கொண்டார் நச்சினார்க்கினியர். இளம்பூரணர் கூறும் கண்ணினான்வரும் குறிப்புரை மேலைச் சூத்திரத்தில் ‘நாட்டம் இரண்டும் கூட்டியுரைக்கும் குறிப்புரை’ என விளக்கப் பெற்றமையின் அதனையே இச்சூத்திரமும் சுட்டியது எனக் கொள்ளுதல் கூறியது கூறல் என்னும் குற்றத்தின்பாற் படுதலானும், இடம் வரையாது நூற்பாவில் வரும் ‘அவை’ என்னும் சுட்டு அதன் அணித்ததாக முன்னோ பின்னோ வுள்ளனவற்றைச் சுட்டுவதன்றி இவ்வியலின் மூன்றாம் இயலாகிய மெய்ப்பாட்டியலில் விரித்துரைக்கப்படும் பன்னிரண்டு மெய்ப்பாடுகளுள் பதினொன்றினை மட்டும் வரைந்து சுட்டுதல் இயலாததாகலாறும் உரையாசிரியர்கள் இருவரும் கூறும் உரைகள் தொல்காப்பியனார் கருத்தினைப் புலப்படுத்துவனவாக அமையவில்லை.


பகிர்ந்து கொடுத்து உண்பதால் வரும் இன்பம் போன்றது இந்த அழகிய மாமை நிறம் உடையாளிடம் பெறும் முயக்கம்.