திணை : நெய்தல்.
    
1 எல்லை சென்றபின் மலருங் கூம்பின 
    
புலவுநீர் அடைகரை யாம்பார்ப் போடும் 
    
அலவனும் அளைவயின் செறிந்தன கொடுங்கழி 
    
இரைநசை வருத்தம் வீட மரமிசைப் 
    
புள்ளும் பிள்ளையொடு வதிந்தன அதனால் 
    
பொழுதன்று ஆகலில் தமியை வருதி 
    
எழுதெழில் மழைக்க.............. 
(385)
  
 1. 
கிடைத்த படிகளனைத்தினும் இப்பாட்டு இந்த அளவே காணப்படுகிறது ;
இதன் எஞ்சிய பாகமும் துறைக்குறிப்பும் பாடினார் பெயரும் காணப்படவில்லை.