குட்டுவன் கண்ணன். (பி-ம்) 3. ‘சொல்லைஇய’; 5. ‘பசுங்கிளை’.
(ப-ரை.) ஐய--, கல் என் கானத்து- கல்லென்னும்ஆரவாரத்தையுடைய காட்டின் கண், கடமா ஆட்டி -கடமாவை நீ அலைப்ப, எல்லும் எல்லின்று - பகற் பொழுதும்மங்கியது; ஞமலியும் இளைத்தன - நாய்களும் நின்னுடன்வேட்டையாடி இளைப்பை அடைந்தன; செல்லல் - போகற்க;ஓங்கு வரை அடுக்கத்து - உயர்ந்த மலைப்பக்கத்தில்,தீதேன் கிழித்த - இனிய தேனிறாலைக்கிழித்த, குவையுடைபசு கழை தின்ற கயம் வாய் - கூட்டமாகிய பசிய மூங்கில்களின்குருத்தைத் தின்ற ஆழ்ந்த வாயையுடைய, பேதை யானை - பேதைமையையுடைய யானை, சுவைத்த கூழை மூங்கில் - தின்றதனாற் கூழையாகிய மூங்கிலையுடைய, குவட்டிடையது - உச்சியின் இடையே உள்ளதாகிய, உது எம்ஊர் - அஃது எமது ஊராகும்.
(முடிபு) ஐய, எல்லும் எல்லின்று; ஞமலியும் இளைத்தன; செல்லல்;குவட்டிடையதுவாகிய; உது எம் ஊர்.
(கருத்து) இரவில் எம்முடைய ஊருக்கு வந்து தங்கிச் செல்வாயாக.
(வி-ரை.) கல்லென்றல்: சிள்வீடு, விலங்கு முதலியவற்றால்உண்டாகும் ஆரவாரம். கடமா - ஒரு வகை விலங்கு. “கடமா தொலைச்சிய கானுறை வேங்கை” (நாலடி. 300.) எல்லின்று: 161, வி-ரை. ஞமலி,தலைவனோடு வந்தவை; தலைவன் நாயொடு வருதலை,
| “முனைபாழ் படுக்குந் துன்னருந் துப்பிற் |
| பகைபுறங் கண்ட பல்வே லிளைஞரின் |
| உரவுச்சினஞ் செருக்கித் துன்னுதொறும் வெகுளும் |
| முளைவா ளெயிற்ற வள்ளுகிர் ஞமலி |
| திளையாக் கண்ண வளைகுபு நெரிதர” (குறிஞ்சிப். 128-32) |
என்பதனால் உணரலாகும்.
செல்லலென்றும், உதுவெம் மூரென்றும் கூறியதனால், நீ போகாமல்எம்முடன் வந்து இரவில் தங்கிச் செல்வாயாக வென்றாளாயிற்று. இதனால்இடையறாது உடனுறைய வேண்டுமென்னும் தம் விருப்பத்தை உணர்த்தி,அங்ஙனம் இருத்தற்கு ஏற்ற நிலை வரைந்துகொண்டு இல்லறம் நடத்தலேயென்பதை உய்த்துணர வைத்தாள்; வைத்தமையின், இது வரைவுகடாவியதாயிற்று.
ஒப்புமைப் பகுதி 1. கல்லென் கானம்: “கல்லென் கடத்திடை”(மலைபடு. 415.)
கானத்துக் கடமா ஆட்டல்: “வெட்சிக் கானத்து வேட்டுவ ராட்டக்,கட்சி காணாக் கடமா நல்லேறு” (புறநா. 202:1-2.)
2. எல்லும் எல்லின்று: குறுந். 390:1; அகநா. 110:11.
தலைவனுடன் நாய் வருதல்: அகநா. 118:5, 182:5, 388:14-5.
3. உது வெம்மூர் :“அஃதெம்மூர்” (அகநா. 38:17.)
4. ஓங்குவரை யடுக்கம்: (குறுந். 69:4); “நெடுமலையடுக்கம்” (அகநா. 92:1.)
4-5. அடுக்கத்துக் கழை: “கழைவள ரடுக்கம்” (அகநா. 82:9.)
தேனடையைக் கழை கிழித்தல்: “காம்பு கால்பொரக் கண்ணகன்மால்வரைப், பாம்பு நான்றெனப் பாய்பசுந் தேறலே” (கம்ப. நாட்டுப். 35.)
5-6. யானை மூங்கிலை உண்ணுதல்: நற். 116:4-5; அகநா. 85:7-8; 148:13, 218:2-3, 328:13, 332:1-2; புறநா. 73:9; 80:7.
(179)