ஒளவையார். (பி-ம். அவ்வையார்.) (பி-ம்.) 1. ‘தண்கமழ்’; 2. ‘நிலமிசை’, ‘வீசும்வந்’, ‘வீசுமந்’, ‘வீசும் வளி கலந்து’, ‘வீழும் வீசுமந்து’; 5. ‘மாமறை’; 6. ‘குரலும்’.
(ப-ரை.) தோழி-, காலம் மாரி - கார்ப்பருவத்துப்பெய்தற்குரிய மழையையுடைய, மாலை மா மழை-மாலைக்காலத்து வரும் கரிய மேகங்கள், இன் இசை உருமினமுரலும் - வித்தி வானோக்கும் புலமுடையாருக்கு இனியஒலியையுடைய இடியேற்றையுடையனவாகி முழங்கும்;பெய்த குன்றத்து - முன்பு மழைபெய்த குன்றத்தின்கண்,பூநாறு தண் கலுழ் மீமிசை - மலர் மணக்கின்ற தண்ணியகலங்கலின்மேலே, தாய - பரவிய, வீ சுமந்து வந்து -மலர்களைச் சுமந்து வந்து, புனலும் இழி தரும் - அருவிப்புனலும் வீழும்; முன் வரல் ஏமம் செய்து அகன்றோர்-கார்ப்பருவத்திற்கு முன்னரே வருவேமென்ற பாதுகாப்பைச்செய்து அகன்ற தலைவர், வாரார் - இன்னும் வாராராயினர்;மன்ற மறந்தோர் - அவர் நிச்சயமாக நம்மை மறந்தார்; நாம்மறவாம் - நாம் அவரை மறத்தல் செய்யாம்.
(முடிபு) தோழி, மழை முரலும்; புனலும் இழிதரும்; அகன்றோர்வாரார்; மறந்தோர் மன்ற; நாம் மறவாம்.
(கருத்து) கார்ப்பருவம் வரவும் தலைவர் வந்தாரல்லர்.
(வி-ரை.) கலுழ், அருவிநீரில் புதுமழையால் உண்டாயது. முன்னரேவீழ்ந்த பூக்களுந் தாதும் உண்மையின் கலுழ் பூ நாறியது. வீயென்றதுஅப்பொழுது உதிர்ந்த பூக்களை. வம்பென்றாளை மறுத்தவளாதலின்,‘காலமாரி’ என்றாள். கார் காலத்திற்கு முன்னரே வருவதாகக் கூறிச்சென்றவர் அது வந்த பின்பும் வந்திலரென்றாள்.
நாமே: ஏகாரம், பிரிநிலை. அகன்றோரே: ஏகாரம் அசை நிலை.
ஒப்புமைப் பகுதி 1-3. புனலும் பூவும்: “நீர்நிறங் கரப்ப வூழுறு புதிர்ந்த,பூமலர் கஞலிய கடுவரற் கான்யாற்று” (அகநா. 18:1-2.)
4. மறந்த தலைவனைத் தலைவி மறவாமை: “நம்மை மறந்தாரைநாமறக்க மாட்டேமால்” (சிலப். 7:32.) 5. காலமாரி: குறுந். 251:2.
6. இன்னிசை யுரும்: ‘இன்குரற், றளிமழை பொழியும்” (மதுரைக்.262-3.)
7.முன்வர லேமம்: “கூதிர்ப், பெருந்தண் வாடையின் முந்துவந்தனனே” (ஐங். 252:4-5)
(200)