பேரிசாத்தன் (பி-ம். பெருஞ்சாத்தன், பேறிச்சாத்தன், பேரிச்சாத்தன்.) (பி-ம்.) 2. ‘ரிழைப்பப்’ 3. ‘பெயருமிருளிய’ 5. ‘மின்னுமிளமுலை’‘மின்னுறலிளமுலை’ 6. ‘சுரமிறந்தோரே’.
(ப-ரை.) தோழி--, இன்னா வைப்பின் - துன்பத்தைச்செய்யும் இடங்களையுடைய, சுரன் இறந்தோர் - பாலைநிலத்தைக் கடந்து சென்றவர், சேய் உயர் விசும்பின் - நெடுந்தூரம் உயர்ந்த வானத்தின்கண், நீர் உறு கம சூல் - நீர்மிக்க நிறைந்த கருப்பத்தையுடைய, தண் குரல் எழிலி - தண்ணிய முழக்கத்தையுடைய மேகம், ஒள் சுடர் இமைப்ப - ஒள்ளிய மின்னலின் ஒளிவிட்டு விளங்க, பெயல் தாழ்புஇருளிய - மழைபெய்து இருண்ட, புலம்பு கொள் மாலையும் - தனிமையைக் கொண்ட மாலைக்காலத்திலும், வரூஉம் - வளருகின்ற, மின் உறழ் இளமுலை ஞெமுங்க - மின்னுதல் மிக்க இளைய முலைகள் அழுந்தும்படி தழுவுதற்கு, வாரார் - வாராராயினார்.
(முடிபு) தோழி, சுரனிறந்தோர் ஞெமுங்க மாலையும் வாரார்.
(கருத்து) கார்ப்பருவம் வரவும் தலைவர் வந்திலர்.
(வி-ரை.) "வானினு முயர்ந்தன்று" (குறுந். 3:1) என்று சிறப்பித்தலின்,சேயுயர் விசும்பென்றாள். தண்ணிய எழிலி, குரலெழிலியெனக் கூட்டிப்பொருள் கொள்ளுதலும் பொருந்தும். மாலை: கார்காலத்துமாலை.மாலையும்: உம்மை, சிறப்பும்மை. வாழி: அசை நிலை. வரூஉம் - எழும்;‘வருமுலை - எழுகின்ற பெரியமுலை' (சிறுபாண். 72, ந.) இன்னுறல்இளமுலையென்னும் பாடத்திற்கு, இனிய முயக்கத்தையுடைய இளையநகிலென்று பொருள் கொள்க; ‘இன்னுறல் வியன் மார்ப-இனிய முயக்கத்தையுடைய அகற்சியையுடைய மார்பனே' (கலி. 8:23, 100:21, ந.) ஞெமுங்கத் தழுவுதற்கென ஒரு சொல் வருவிக்க.
ஒப்புமைப் பகுதி 1-2. கமஞ்சூலெழிலி: "கமஞ்சூன் மாமழை" (முருகு. 7; நற். 347: 1; அகநா. 134:2.)
5. பி-ம். இன்னுறல்: அகநா. 399:3.
6. சுரனிறந்தோர் : குறுந். 211:7, 215:7, 260:8.
(314)