(தலைமகனது வரவு நீட்டித்ததாகத் தோழி இயற்பழித்த விடத்து,தலைவன் வர, அஃதுணர்ந்த தலைவி, "நாம் அவரூருக்குப் போய்அவரோடு பழகுவோம்" என்று கூறியது.)
 322.    
அமர்க்க ணாமா னஞ்செவிக் குழவி  
    
கானவ ரெடுப்ப வெரீஇ யினந்தீர்ந்து  
    
கான நண்ணிய சிறுகுடிப் பட்டென  
    
இளைய ரோம்ப மரீஇயவ ணயந்து  
5
மனையுறை வாழ்க்கை வல்லி யாங்கு  
    
மருவி னினியவு முளவோ  
    
செல்வாந் தோழி யொல்வாங்கு நடந்தே.  

என்பது தலைமகன் வரவுணர்ந்து (பி-ம். வரைவுணர்ந்து) தலைமகள்இயற்பட மொழிந்தது.

ஐயூர் முடவன்.

     (பி-ம்.) 2. ‘வொரீஇ’ 7. ‘யொல்லாங்கு’

     (ப-ரை.) தோழி--, அமர் கண் ஆமான் அம்செவிகுழவி - மேவுதலையுடைய காட்டுப் பசுவின் அழகியகாதுகளையுடைய கன்று, கானவர் எடுப்ப வெரீஇ இனம்தீர்ந்து - வேட்டுவர் எழுப்புவதனால் அஞ்சித் தன் இனத்தினின்றும் பிரிந்து சென்று, கானம் நண்ணிய சிறுகுடிபட்டென - காட்டினிடத்துப் பொருந்திய சிறிய ஊரிலேஅகப்பட்டதாக, இளையர் ஓம்ப மரீஇ - இளைய மகளிர்பாதுகாப்பக் கலந்து, அவண் நயந்து - அவ்விடத்தைவிரும்பி, மனை உறை வாழ்க்கை வல்லியாங்கு - வீட்டின்கண் உறையும் வாழ்க்கையில் வன்மை பெற்றது போல,மருவின் - கலந்து பழகுதலைக் காட்டிலும், இனியவும்உளவோ - இனிய பொருள்களும் இருக்கின்றனவோ?ஆதலின் நாமும் தலைவரோடு மருவும் பொருட்டு, ஒல்வாங்கு நடந்து - இயன்ற அளவில் நடந்து, செல்வாம் - தலைவன் இருக்குமிடத்திற்குச் செல்வேம்.

     (முடிபு) தோழி, ஆமான்குழவி எடுப்ப வெரீஇத் தீர்ந்து குடிப்பட்டென, ஓம்ப மரீஇ நயந்து வில்லியாங்கு, மருவின் இனியவும் உளவோ?நடந்து செல்வாம்.

     (கருத்து) தலைவன் இருக்குமிடத்துக்கு யான் போவோமாக.

     (வி-ரை.) தலைவன் குறியிடத்து உரிய காலத்தே வாராமையின்,தோழி, "அவனது இயல்பும் நம் இயல்பும் ஒத்தனவல்ல" எனக் கூறிஇயற்பழித்தாள். அப்பொழுது தலைவன் வந்து சிறைப்புறத்தே நின்றான்.அதனை அறிந்த தலைவி, "அவர் வாராவிடினும் நாமேனும் அவர் உள்ளஇடத்திற்கு நடந்து செல்வேமாக" என்று கூறித் தன் ஆதரவைப்புலப்படுத்தினாள்.

     அமர்த்தல் - மேவுதல் (புறநா. 117:4, உரை.) எடுப்ப - மறைந்திருந்த புதல்களிலிருந்து கொம்பு முதலியன ஊதுதலாலும் பிறவாற்றாலும் எழுப்ப.

     இளையர் - சிறாருமாம். வல்லியாங்கு மருவுதலென்று தொழிற்பெயரின் முதனிலையோடு இயைக்க.

     ஆமானின் குழவி தன் இயல்புக்கு ஒவ்வாத குடியிற்பட்டாலும்அவர்களோடு மருவி அவரது வாழ்க்கையிலே வன்மைபெற்றது போல்தலைவர் நம் இயல்புக்கு ஒவ்வாரெனினும் அவரோடு பழகி அவருடையஇயல்புகளைப் பெற்று வாழவேண்டுமென உவமையை விரித்துக் கொள்க.

     வேறுபட்ட இயல்புடையாரும் பழக்கத்தினால் இனியராதலை,

  
"பழகிய பகையும் பிரிவின் னாதே"          (நற். 108:6)  

என்பது புலப்படுத்தும்.

     தலைவன் வரவறிந்த தலைவி, ‘நடந்து செல்வாம்' என்று கூறினாள்,அது நேராதென்னும் கருத்துடையளாதலின்.

     ஒப்புமைப் பகுதி 1. அமர்க்கணாமான்: நற். 165:1; புறநா. 117:4-5.

     3. சிறுகுடி: குறுந். 184:2, ஒப்பு.

     1-3. ஆமான்குழவி இனத்திற் றீர்ந்து அகப்படல்: "தொழுதி போகவலிந்தகப் பட்ட, மடநடை யாமான் கயமுனிக் குழவி" (மலைபடு.499-500.)

     7. பி-ம். ஒல்லாங்கு: கலி. 3:11.

(322)