(தலைவன் இரவுக்குறி நயந்த காலத்துத் தோழி, “நீ இரவில் வருதல்தகாது; அதனால் இவள் வருந்துவள்” என்று அது மறுத்த வாய்பாட்டால்வரைவு கடாயது.)
  336.    
செறுவர்க் குவகை யாகத் தெறுவர 
    
ஈங்கனம் வருபவோ தேம்பாய் துறைவ 
    
சிறுநா வொண்மணி விளரி யார்ப்பக் 
    
கடுமா நெடுந்தேர் நேமி போகிய 
5
இருங்கழி நெய்தல் போல 
    
வருந்தின ளளியணீ பிரிந்திசி னோளே. 

என்பது தலைமகன் இரவுக்குறி நயந்தானைத் தோழி சொல்லி மறுத்தது.

குன்றியன்.

    (பி-ம்) 1. ‘செறுவார்க்’ 2. ‘ஈங்கினம்’.

    (ப-ரை.) தேம் பாய் துறைவ - தேன் பரவுகின்றதுறையையுடைய தலைவ, செறுவர்க்கு உவகை ஆக -பகைவருக்கு மகிழ்ச்சி உண்டாக, தெறுவர - எமக்குத்துன்பமுண்டாகும்படி, ஈங்கனம் வருபவோ - இங்கேஅறிஞர் வருவரோ? நீ பிரிந்திசினோள் - நீ பிரிந்த தலைவி,சிறு நா ஒள் மணி - சிறிய நாவையுடைய ஒள்ளிய மணிகள்,விளரி ஆர்ப்ப - விளரிப் பண்ணைப் போல முழங்க,கடுமா நெடு தேர் நேமி போகிய - விரையும் குதிரையைப்பூண்ட நெடிய தேரினது சக்கரம் மேலே ஏறிப்போனமையால் நலிந்த, இருகழி நெய்தல் போல - கரிய கழியினிடத்துள்ள நெய்தல் மலரைப் போல, வருந்தினள் - வருத்தத்தையடைந்தாள்; அளியள் - இரங்கத்தக்காள்.

     (முடிபு) துறைவ, வருபவோ? நீ பிரிந்திசினோள் வருந்தினள்;அளியள்.

     (கருத்து) நீ இரவில் வருதல் நன்றன்று.

     (வி-ரை.) செறுவர்க்கு உவகையாக வென்றது நினக்கு ஏதம் நேரும்என்றபடி. விளரி - இரங்கற்பண்; நெய்தனிலத்துக் குரியது. தலைவன்தேரேறிக் கடற்கரை வழியே வரும் வழக்கமுடையனாதலின் அவனறிந்தஉவமையையே எடுத்துரைத்தாள்.

     நீ பிரிந்திசினோளென்றது களவுக்காலத்தில் இடையிடையே உண்டாகும் பிரிவினை நினைவுறுத்தியது; இதனால் என்றும் பிரியாதுறைதலே வேண் டற்பாலதென்பதும், அதற்கு வரைதலே தக்கதென்பதும் உணர்த்தப்பட்டன.

     பிரிந்திசினோள்: இசின் படர்க்கைக்கண் வந்தது.

    (மேற்கோளாட்சி) மு. தலைவன் இரவுக்குறி நயந்தானைத் தோழி மறுத்தது தொல். களவு. 22, ந.)

    ஒப்புமைப் பகுதி 3. சிறுநா வொண்மணி: நற். 267:9.

    3-4. தலைவன் தேர்மணி யொலிக்க வருதல்:

குறுந். 155:4-7,ஒப்பு. 212:1-3.

    5. கழிநெய்தல்: குறுந். 9:4-5, ஒப்பு.

    4-5. தேரின் நேமியால் நெய்தல் குறைதல்: குறுந். 227:1-3, ஒப்பு.

(336)