அண்டர்மகன் குறுவழுதி. (பி-ம்.) 1. ‘கொடிஞ்சி’ 2. ‘றவிர்த்த நிரையசைஇ’, ‘றவிர்த்தனிரசைஇ’3. ‘றவறோதகைய’, ‘றவறேதைய’, ‘றவறோதைஇய’.
(கு-பு.) இச்செய்யுளின் நாலாம் அடி ஒரு பிரதியில் இல்லை.
(ப-ரை.) தாழை தைஇய - தாழை பொருந்திய, தயங்குதிரை கொடு கழி - விளங்கிய அலைகளையுடைய வளைந்தகழியானது, இழுமென ஒலிக்கும் - இழுமென்று ஆரவாரம்செய்யும், ஆங்கண் - அவ்விடத்துள்ள, பெரு நீர் வேலிஎம் சிறு நல் ஊர் - பெரிய கடலை வேலியாகவுடையஎமது சிறிய நல்லூரின்கண், இழை அணிந்து இயல் வரும்கொடுஞ்சி நெடு தேர் - பொற்படைகளால் அணியப்பட்டுஓடுகின்ற கொடுஞ்சியையுடைய நுமது உயர்ந்த தேரை,வரை மருள் நெடு மணல் தவிர்த்து - மலையையொத்தஉயர்ந்த மணல்மேட்டிலே நிறுத்திவிட்டு, நின்று அசைஇ - இங்கு இருந்து இளைப்பாறி, தழை தாழ் அல்குல் இவள்புலம்பு அகல - தழையுடை தாழ்ந்த அல்குலையுடையஇத்தலைவியினது தனிமை வருத்தம் நீங்கும்படி, தங்கினிர்ஆயின் - தங்குவீரானால், தவறோ - அது பிழையாகுமோ?
(முடிபு) தவிர்த்து நின்று அசைஇ, புலம்பு அகல நல்லூரில் தங்கினிராயின் தவறோ!
(கருத்து) இனி நீர் இரவில் வந்து தலைவியோடு அளவளாவுவீராக.
(வி-ரை.) இழை - பொற்படை (புறநா. 123:4, உரை); அலங்காரப்பொருள்களுமாம். இரவுக்குறி இல்வரை இகவாததாதலின் அங்கே தேரோடுவரின் ஊரினர் அறிவரென்றஞ்சி அதனை மணல் மேட்டில் நிறுத்தி வரும்படி உரைத்தாள். தவறோவென்ற வினா அங்ஙனம் செய்தல் வேண்டுமென்னும் கிடக்கையினது. தெய்ய: அசைநிலை; தைஇய என்ற பாடத்திற்கு உடுத்தவென்று பொருள் கொள்க.
தாழையில் மோதும் அலைகள் ஒலித்தலின் கழி இழுமென்னும்ஓசையையுடையதாயிற்று.
பகற்குறியிடத்துக்கண் வந்த தலைவனுக்குக் கூறுதலின் தம் ஊருள்ள இடத்தை ஆங்கணெனச் சேய்மைச்சுட்டாற் குறிப்பித்தாள்.
ஒப்புமைப் பகுதி 1. இழை யணிந்த தேர்: நற். 10:5; கலி. 99:7; அகநா. 238: 12; புறநா. 123:4, 359:15.
கொடுஞ்சி நெடுந்தேர்: குறுந். 212:1, ஒப்பு.
2. வரைமருள் நெடுமணல்: குறுந். 236:3, ஒப்பு.
1-2. தேரைத் தனியே நிறுத்திவிட்டுத் தலைவன் வருதல்: "தேர்சே ணீக்கித் தமியன் வந்து" (அகநா. 380:1.)
4. தழை தாழல்குல்: குறுந். 125:3, ஒப்பு.
5. தாழை தைஇய கழி: குறுந். 340:4-6.
6. இழுமென லித்தல்:குறுந். 351:3-4; முருகு. 316.
7. மு. அகநா. 310:17.
(345)