பேரிசாத்தன் (பி-ம். பேரீசாத்தன், பெரிச்சாத்தன்.) (பி-ம்.) 1. 'பால்வரைத்'; 6. 'பொழுகுகண்ணள'், 'ளாகிய'; 7. 'பழுதாலம்ம'.
(ப-ரை.) இ ஆய் இழை - இந்த ஆய்ந்த அணிகலன்களை அணிந்த தலைவி, வெறியாள் கூறவும் அமையாள் - வெறி யாடும் மகள் இந்நோய் முருகனாலாயது என்று சொல்லவும் அமைதி பெறாளாய், அதன் தலை - அதன் மேலும், பசு கண் மாசுனை பல் பிணி அவிழ்ந்த - பசிய இடத்தையுடைய கரிய சுனையினிடத்தே பல கட்டு அவிழ்ந்த, வள் இதழ் நீலம் நோக்கி - வளவிய இதழையுடைய நீலமலரைப் பார்த்து, உள் அகைபு - நெஞ்சுள்ளே வருந்தி, அழுத கண்ணள் ஆகி - அழுத கண்களையுடையவளாகி, துணிவு - துணிந்தது, பழுது அன்று - குற்றமற்றது; பால் வரைந்து அமைத்தல் அல்லது - பழவினையினாலே வரையறுத்துப் பொருத்தப் பட்டதன்றி, அவர் வயின் - அத்தலைவர் திறத்தில், சால்பு அளந்து அறிதற்கு - தகுதியை வரையறுத்து அறிவதற்கு, யாம் யார் - யாம் எத்தகுதியை உடையேம்?
(முடிபு) இவ்வாயிழை அமையாள், நீலம் நோக்கி அழுதகண்ணளாகித் துணிவு பழுதன்று.
(கருத்து) தலைவிக்கு நீலப்பூவைத் தந்து நட்புச்செய்த அன்பன் ஒருவன் உளன்.
(வி-ரை.) பால்வரைந்தமைத்தலினாலே கூடினரென்பது அறத்தொடு நிற்கும் வகையுள் ஒன்றாகிய தலைப்பாடு; ‘தலைப்பாடு - இருவரும் தாமே எதிர்ப்பட்டார், யான் அறிந்திலேனெனக் கூறுதல்’ (தொல். பொருள். 13, ந.); சால்பளந்தறிதற்கு யாம் யாரென்றது தலைவனை ஏத்தல்.
நீலநோக்கி அழுதனளென்றது அத்தகையதொரு நீலப்பூவைத் தனக்குத் தந்த தலைவனை நினைத்ததைக் குறித்தபடி; இஃது ஏதீடு.ஆகியென்ற எச்சம் துணிவென்னும் தொழிற்பெயரோடு முடிந்தது.அமையாள் நோக்கி ஆகித் துணிவு பழுதன்றென வினைமுடிவு செய்க.
ஓ. அம்ம, ஏ: அசை நிலைகள்.
ஒப்புமைப் பகுதி 1-2. தலைவன் சால்பு அறியப்படாமை: குறுந். 377:4.
3. அதன்றலை: குறுந். 302:2.
4-5. பிணியவிழ்ந்த பூ: குறுந். 220:4-5.
(366)