கயமனார். (பி-ம்.) 1. ‘காணாத மாணிழற் படீஇ’; 3. ‘தண்ணளிச்’, ‘தண்மழை தலையலாரைக் குகுந்த தீறத்துச்’; 4. ‘சுடர்படு’; 5. ‘மடவர லரிவை’, ‘போகியகானே’.
(ப-ரை.) நம் நீத்து - நம்மைப் பிரிந்து, சுடர் வாய் நெடுவேல் காளையொடு - ஒளி பொருந்திய நெடிய வேலையுடைய தலைவனோடு, மடம் மாஅரிவை - மடப்பத்தையும் மாமையையும் உடைய தலைவி, போகிய சுரன் - சென்றபாலைநிலம், ஞாயிறு காயாது - சூரியன் வெயில் வீசாமல்,மரம் நிழல் பட்டு - மரத்தின் நிழல் பொருந்தி, மலை முதல்சிறுநெறி - மலையினிடத்தேயுள்ள சிறிய வழியின்கண்,மணல் மிக தாஅய் - மணல் மிகப் பரவப்பெற்று, தண்மழைதலையின்று ஆக - குளிர்ந்த மழை பெய்ததாகுக.
(முடிபு) சுரன் காயாது நிழற்பட்டுத் தாஅய்த் தலையின்றாக.
(கருத்து) தலைவி சென்ற பாலைநிலம் இனியதாகுக.
(வி-ரை.) நிழல் வேண்டியது, கதிரோன் வெம்மையால்துன்புறாதபடி. மணல் பரவுதலால் தலைவியின் மெல்லடி நடத்தற்குநெறி ஏற்றதாகும். மழை பெய்தலின் பாலையின் வெம்மை நீங்கும்.
அரிவை: தலைவியென்னும் துணையாய் நின்றது. இத்துறை ‘சுரந்தணிவித்தல்’ எனவும் வழங்கும்.
(மேற்கோளாட்சி) மு. செவிலி தெய்வம் வாழ்த்தியது (நம்பி. 184).
ஒப்புமைப் பகுதி 1. மரநிழலால் ஞாயிறு காயாத நிலை பெறுதல்: “மாநிழற் பட்ட மரம்பயி லிறும்பின், ஞாயிறு தெறாஅ மாக நனந்தலை”(மலைபடு. 271-2.)
3. தலையின்று: அகநா. 54:3.
4. நெடுவேல்: குறுந். கட. 4, 390:4.
5. பி-ம். மடவரலரிவை: குறுந். 321:4, ஒப்பு.
மு. | “மள்ளர் கொட்டின் மஞ்ஞை யாலும் |
| உயர்நெடுங் குன்றம் படுமழை தலைஇச் |
| சுரநனி யினிய வாகுக தில்ல |
| அறநெறி யிதுவெனத் தெளிந்தவென் |
| பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே’’ (ஐங். 371); |
|
| “சூன்முதிர் கொண்மூ மின்னுபு பொழியக் |
| கானங் கடுமை நீங்குக |
| மானுண் கண்ணி போகிய சுரனே” (தமிழ்நெறி, மேற். 121) |
(378)